Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு முடிவு செய்யுங்கள் எம்எல்ஏக்களே! - பாக்யராஜ்
சென்னை: சசிகலா தரப்பு எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதி மக்களின் கருத்தைக் கேட்ட பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் கே பாக்யராஜ் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. அபிமானியும், எனது கலையுலக வாரிசு என எம்ஜிஆரால் அறிவிக்கப்பட்டவருமான கே பாக்யராஜ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஒரு ஆள் 'சீட்' (எம்.எல்.ஏ.) வாங்கி கொடுக்கிறாங்க? அல்லது ஒரு குடும்பம் சீட் வாங்கி தருகிறது என்று சொன்னால் அந்த குடும்பத்துக்கு கடைசிவரை விசுவாசமாக இருக்கணும் என்று நினைக்கிறார்கள் என்றால் தப்பே இல்லை.
ஆனால் அதே நேரத்தில் ஓட்டு போட்ட எத்தனையோ குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம் னே. எனவே ஆங்காங்கே ஒளிந்து கொண்டு, மறைந்து கொண்டு நான் சுதந்திரமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்வதை விட்டு விடுங்கள்.
தொகுதிக்குச் சென்று மக்கள் கருத்தைக் கேட்டு அதன்படி முடிவு எடுங்கள்," என்று கூறியுள்ளார்.