Don't Miss!
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ 2 கோடி விட்டுக் கொடுத்த ராஜமௌலி... பிற்பகலுக்குப் பின் வெளியாகிறது பாகுபலி 2!
பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பதிப்பு வியாபாரத்தில் நிலவிய முட்டுக்கட்டையைத் தீர்க்க ரூ 2 கோடி வரை விட்டுக் கொடுத்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி. இதனால் படம் இன்று பிற்பகலுக்குப் பிறகு வெளியாகிறது.
இன்று காலை வெளியாக வேண்டிய பாகுபலி 2, பணப் பிரச்சினையால் தடைபட்டுவிட்டது. படத்தைத் திரையிட தேவையான கேடிஎம் எந்த அரங்குக்கும் அனுப்பப்படவில்லை.
ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து, ரூ 2 கோடி பாக்கியில் வந்து நின்றபோது, அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியதால், படத்தை வெளியிட பிற்பகலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பகல் மேட்னி காட்சியிலிருந்து பாகுபலி 2 வெளியாகிறது.
பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை ரூ 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களின் மோசமான வர்த்தகம் காரணமாக இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது, இயக்குநர் ராஜமௌலிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.