twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ 2 கோடி விட்டுக் கொடுத்த ராஜமௌலி... பிற்பகலுக்குப் பின் வெளியாகிறது பாகுபலி 2!

    By Shankar
    |

    பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பதிப்பு வியாபாரத்தில் நிலவிய முட்டுக்கட்டையைத் தீர்க்க ரூ 2 கோடி வரை விட்டுக் கொடுத்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி. இதனால் படம் இன்று பிற்பகலுக்குப் பிறகு வெளியாகிறது.

    இன்று காலை வெளியாக வேண்டிய பாகுபலி 2, பணப் பிரச்சினையால் தடைபட்டுவிட்டது. படத்தைத் திரையிட தேவையான கேடிஎம் எந்த அரங்குக்கும் அனுப்பப்படவில்லை.

    Bahubali 2 from Today matinee show

    ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து, ரூ 2 கோடி பாக்கியில் வந்து நின்றபோது, அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியதால், படத்தை வெளியிட பிற்பகலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பிற்பகல் மேட்னி காட்சியிலிருந்து பாகுபலி 2 வெளியாகிறது.

    பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை ரூ 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களின் மோசமான வர்த்தகம் காரணமாக இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது, இயக்குநர் ராஜமௌலிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Bahubali 2 will be released Today after 2 PM all over the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X