Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டன் ருதுராஜுக்கு வந்த சிக்கல்.. ஆறு மேட்ச்சிலும் ஒரே மாதிரியாக நடந்த நிகழ்வு
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரூ 2 கோடி விட்டுக் கொடுத்த ராஜமௌலி... பிற்பகலுக்குப் பின் வெளியாகிறது பாகுபலி 2!
பாகுபலி 2 படத்தின் தமிழ்ப் பதிப்பு வியாபாரத்தில் நிலவிய முட்டுக்கட்டையைத் தீர்க்க ரூ 2 கோடி வரை விட்டுக் கொடுத்தார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி. இதனால் படம் இன்று பிற்பகலுக்குப் பிறகு வெளியாகிறது.
இன்று காலை வெளியாக வேண்டிய பாகுபலி 2, பணப் பிரச்சினையால் தடைபட்டுவிட்டது. படத்தைத் திரையிட தேவையான கேடிஎம் எந்த அரங்குக்கும் அனுப்பப்படவில்லை.
ஒருவழியாக பேச்சுவார்த்தை முடிந்து, ரூ 2 கோடி பாக்கியில் வந்து நின்றபோது, அதற்கு தான் பொறுப்பேற்பதாக இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி கூறியதால், படத்தை வெளியிட பிற்பகலுக்குப் பிறகு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிற்பகல் மேட்னி காட்சியிலிருந்து பாகுபலி 2 வெளியாகிறது.
பாகுபலி 2 படத்தின் தமிழக உரிமை ரூ 47 கோடிக்கு வாங்கப்பட்டது. ஆனால் விநியோகஸ்தர்கள், பைனான்சியர்களின் மோசமான வர்த்தகம் காரணமாக இந்தப் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது, இயக்குநர் ராஜமௌலிக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.