Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
அதிகாலையிலேயே பாகுபலி 2 பார்க்கப் போய் ஏமாந்த சென்னை, கோவை ரசிகர்கள்!
பொதுவாக ரஜினி படங்களுக்குத்தான் நள்ளிரவு 1 மணிக்கு முதல் ஷோ காட்டுவார்கள். ரசிகர்களுக்காக இந்த சிறப்பு சலுகை. அடுத்த விஜய், அஜீத் படங்களுக்கும் அதிகாலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி போடுவது வழக்கமாகிவிட்டது.
தெலுங்கு நடிகர்கள் நடித்திருந்தாலும் பாகுபலி 2 -க்கும் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு இணையான முக்கியத்துவத்தை ரசிகர்கள் தந்திருக்கிறார்கள். இந்தப் படமும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்புக் காட்சிக்கான கட்டணம் ரூ 500. இவ்வளவு அதிக விலைக் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கவும் இன்று காலை பெரும் கூட்டம் காத்திருந்தது கோயம்பேடு ரோகிணி திரையரங்கில். ஆனால் க்யூபுக்கான கேடிஎம் வரவில்லை என்று காட்சியை ரத்து செய்துவிட்டார்கள் (சிம்பிளாக பொட்டி வரல). வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏகக் கடுப்பில் கலைந்து சென்றார்கள்.
கோவையிலும் இதே கதைதான். காரணம் படத்துக்கான பைனான்ஸ் சிக்கல் இன்னும் தீரவில்லை என்கிறார்கள்.