Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அதிகாலையிலேயே பாகுபலி 2 பார்க்கப் போய் ஏமாந்த சென்னை, கோவை ரசிகர்கள்!
பொதுவாக ரஜினி படங்களுக்குத்தான் நள்ளிரவு 1 மணிக்கு முதல் ஷோ காட்டுவார்கள். ரசிகர்களுக்காக இந்த சிறப்பு சலுகை. அடுத்த விஜய், அஜீத் படங்களுக்கும் அதிகாலை 5 மணிக்கு சிறப்புக் காட்சி போடுவது வழக்கமாகிவிட்டது.
தெலுங்கு நடிகர்கள் நடித்திருந்தாலும் பாகுபலி 2 -க்கும் ரஜினி, விஜய், அஜீத் படங்களுக்கு இணையான முக்கியத்துவத்தை ரசிகர்கள் தந்திருக்கிறார்கள். இந்தப் படமும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சிறப்புக் காட்சி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சிறப்புக் காட்சிக்கான கட்டணம் ரூ 500. இவ்வளவு அதிக விலைக் கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கவும் இன்று காலை பெரும் கூட்டம் காத்திருந்தது கோயம்பேடு ரோகிணி திரையரங்கில். ஆனால் க்யூபுக்கான கேடிஎம் வரவில்லை என்று காட்சியை ரத்து செய்துவிட்டார்கள் (சிம்பிளாக பொட்டி வரல). வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏகக் கடுப்பில் கலைந்து சென்றார்கள்.
கோவையிலும் இதே கதைதான். காரணம் படத்துக்கான பைனான்ஸ் சிக்கல் இன்னும் தீரவில்லை என்கிறார்கள்.