பாகுபலி 3 வரப்போகுதா?.. பிரபாஸ், அனுஷ்கா கொடுத்த சிக்னல்.. 5000 கோடி சம்பவம் லோடிங்!

சென்னை: இந்தியத் திரையுலக வரலாற்றில் எண்ணற்ற சாதனைகளை முறியடித்த ஒரு பிரம்மாண்ட காவியம் 'பாகுபலி'. இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய இந்தத் திரைப்படம், தெலுங்கு சினிமாவின் எல்லையைத் தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலக அரங்கில் தலைநிமிரச் செய்தது.

2015-ல் வெளியான 'பாகுபலி: தி பிகினிங்' மற்றும் 2017-ல் வெளியான 'பாகுபலி 2: தி கன்க்ளூஷன்' ஆகிய படங்கள் வசூலில் சாதனை படைத்தது மட்டுமின்றி, புதிய மைல்கல்களையும் எட்டின. இந்த இரு பாகங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இதன் மூன்றாவது பாகத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஆவலுடன் காத்திருந்தனர். தற்போது அவர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் 'பாகுபலி 3' குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bahubali 3 Prabhas and Anushka spills the beans in Torch Bearer Promo

'தி டார்ச்பியரர்': பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) 'பாகுபலி: தி டார்ச்பியரர்' (Baahubali: The Torchbearer) என்ற பெயரில் ஒரு சிறப்பு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. நான்கு எபிசோடுகளாக வெளிவந்துள்ள இந்த ஆவணப்படத்தில், திரைப்படம் உருவான விதம், படப்பிடிப்பின் போது எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மகிழ்மதி பேரரசை திரையில் கொண்டு வர படக்குழுவினர் எதிர்கொண்ட கடின உழைப்பு ஆகியவை மிக அழகாகக் காட்டப்பட்டுள்ளன. இதில் பிரபாஸ், ராணா டக்குபாதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, தயாரிப்பாளர் சோபு யார்லகட்டா மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இப்படத்திற்காக உழைத்த அனைவரையும் இதில் காட்டியிருப்பது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபாஸ் குறித்து இந்த ஆவணப்படத்தில் பிரத்யேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகுபலி கதாபாத்திரத்திற்காகத் தனது திரையுலக வாழ்க்கையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணித்த விதம் ரசிகர்களை மீண்டும் கவர்ந்துள்ளது. அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலி கதாபாத்திரங்களில் பிரபாஸின் சிறப்பான நடிப்பை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் நெகிழ்ச்சியான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ராஜமௌலியின் பலத்த கனவை நம்பி இவ்வளவு பெரிய திட்டத்தைத் தயாரித்த சோபு யார்லகட்டாவின் துணிச்சலையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்திய சினிமாவின் தரத்தை உயர்த்திய ஒரு படமாக பாகுபலி ஏன் திகழ்கிறது என்பதை இந்த ஆவணப்படம் மீண்டும் நினைவூட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாகுபலி 3 ரெடியாகுதா?: இந்த ஆவணப்படத்தின் கடைசிப் பகுதியில் ரசிகர்களுக்கு முற்றிலும் எதிர்பாராத ஒரு பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. இயக்குநர் ராஜமௌலி, "பாகுபலி கதை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை" என்று ஒரு சிக்னல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து, பிரபாஸ், ராணா டக்குபாதி மற்றும் அனுஷ்கா ஷெட்டி ஆகியோர் தோன்றிய ஒரு பிரத்யேக வீடியோவில் 'பாகுபலி 3' பற்றிய பேச்சு எழுந்தது. வீடியோவில் ராணா தமாஷாக, "ராஜமௌலி சார் இங்கே இல்லாவிட்டாலும், நான் இந்த விஷயத்தைக் கூறிவிடுகிறேன்" என்று பாகுபலி 3 பற்றி அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு திரையில் 'தி லெகசி கன்டினியூஸ்' (The Legacy Continues) என்ற வாசகம் தோன்றியதன் மூலம் பாகுபலி உலகம் மீண்டும் தொடரப்போவது உறுதியானது.

பாகுபலி பகுதி 3-ன் கதை எவ்வாறு அமையலாம்?: 'பாகுபலி 2' திரைப்படத்துடன் முதன்மைக் கதை முடிவுக்கு வந்திருந்தாலும், மகிழ்மதி பேரரசுடன் தொடர்புடைய இன்னும் பல கதைகள் மீதமுள்ளன. அமரேந்திர பாகுபலியின் ஆட்சி முறை, மகேந்திர பாகுபலியின் அரசு நிர்வாகம், சிவகாமி கதாபாத்திரத்தின் பின்னணிக் கதைகள் அல்லது முற்றிலும் ஒரு புதிய கதைக் களத்துடன் மூன்றாவது பாகம் உருவாக்கப்படலாம் என்று சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். ராஜமௌலியும் தனது கடந்த கால பேட்டிகளில் பாகுபலி உலகில் இன்னும் சொல்லப்படாத கதைகள் பல உள்ளன என்று குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது. அதனால், தற்போது பகுதி 3 அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதன் கதை எந்த திசையில் பயணிக்கும் என்ற பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.

5000 கோடி சம்பவம்: தற்போது ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட அட்வென்ச்சர் 'வாரணாசி' திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தத் திட்டம் முழுமையாக நிறைவடைந்த பின்னரே, 'பாகுபலி 3' படத்திற்கான பணிகள் தொடங்குவதற்கு வாய்ப்பிருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிலர் இந்த அட்வென்ச்சர் படத்திற்குப் பிறகு 'பாகுபலி 3' படப்பிடிப்பு தொடங்கும் என்று கணித்துள்ளனர். எனினும், இதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், கதைக்களம் என்ன என்பது போன்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் படக்குழுவினரிடமிருந்து இன்னும் வெளியாக வேண்டியுள்ளது. பாகுபலி 3 உருவானால் கண்டிப்பாக 5000 கோடி வசூலை உலகளவில் ஈட்டும் என்றும் பட்ஜெட்டே 2000 கோடியை தாண்டும் என்று கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X