கபாலி படத்தை பார்க்க முடியவில்லை.. பாகுபலி இயக்குநர் வருத்தம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள கபாலி திரைப்படத்தை பார்க்க முடியாமல் சூட்டிங்கில் பிசியாக சிக்கிக்கொண்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார் பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி.
கபாலியின் வெற்றி பாகுபலியை தூக்கி சாப்பிட்டுவிடும் என்பது, ரஜினி ரசிகர்கள் டாக்காக இருந்தது. எனவே படத்தை பார்த்துவிட்டு, ராஜமவுலி என்ன சொல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் ராஜமவுலியோ படத்தையே இன்னும் பார்க்கவில்லை என்று இன்று காலை டிவிட் செய்துள்ளார். சூட்டிங்கில் பிசியாக இருப்பதால் முதல்நாள், முதல் காட்சியை பார்க்க முடியவில்லை என்பது அவரது வருத்தம்.
தலைவா மேனியாவில் சிக்கியிருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications