ஜியா தற்கொலை வழக்கு: சூரஜ் பன்சாலிக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்

கடந்த மாதம், மும்பையில் தனது வீட்டில் நடிகை ஜியாகான் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணமாக, ஜியாகான் எழுதியதாக ஆறு பக்க கடிதம் ஒன்றை அவரது தாயாரும், சகோதரியும் போலீஸில் ஒப்படைத்தனர்.
அதில், தனது காதல் தோல்வியே தற்கொலைக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது. அதனை ஆதாரமாக வைத்து, நடிகர் சூரஜ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சூரஜின் வீட்டில் செய்யப்பட்ட சோதனையில் ஜியா எழுதியதாக 5 காதல் கடிதங்கள் சிக்கின.
இரண்டு கடிதங்களுக்குமிடையே கையெழுத்து வித்தியாசம் இருப்பதால், அதனை கையெழுத்து நிபுணரிடம் கொடுத்து உண்மையைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளது மும்பை போலீஸ். இந்நிலையில் சிறையில் இருந்த சூரஜ் பெயில் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், இன்று, ரூபாய் 50,000க்கான பிணையத்தொகையுடன் சூரஜ்க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது மும்பை நீதிமன்றம்.


Click it and Unblock the Notifications











