Don't Miss!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- News விடாமல் விரட்டும் எல்நினோ தாக்குதல்.. சென்னையில் மழை வருமா? அப்டேட் வந்தாச்சு
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திரைத் துளி
சென்னை:
கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருந்த நடிகர் மன்சூர்அலிகானுக்குஜாமீன் வழங்கப்பட்டது.
நடிகர் மன்சூர்அலிகான் தன்னிடம் உதவியாளராக இருந்த சிநேகா என்ற இளம்பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுத்து கற்பழித்ததாக அவர் மீது வழக்குதொடரப்பட்டது.
இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ 3 லட்சத்து 25ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்தது. இதைத்தொடர்ந்து மன்சூர்அலிகான் சிறையில் அடைக்கப்பட்டார்.
மன்சூர்அலிகான் தனக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யுமாறு கோரி சென்னைஉயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மனு மீதான விசாரணை முடியும்வரை தன்னை ஜாமீனில் விடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மலை சுப்ரமணியம்.முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம்விதித்த அபராதத் தொகையை செலுத்தினால் மன்சூர்அலிகானை ஜாமீனில்விடுவதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.
இதையடுத்து மன்சூரின் சார்பில் ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
பணம் செலுத்தப்பட்ட விவரத்தை மன்சூரின் வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார்.இதன் பின் மன்சூர்அலிகானை ரூ 50,000 ஆயிரம் சொந்த ஜாமீனிலும், அதேதொகைக்கு இரு நபர் ஜாமீனிலும் விட நீதிபதி உத்தரவிட்டார்.