Don't Miss!
- News இதுக்கு எதுக்கு தட்கலில் டிக்கெட் புக் பண்ண வேண்டும்? ஏசி 2ம் வகுப்பு பெட்டியிலேயே இதுதான் நிலைமை
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Technology மிரட்டும் 3 கண் கேமரா.. இதில் 1" இன்ச் ரிட்ராக்டபிள் கேமராவும் இருக்கு.. தூள் பறக்குது HUAWEI Pura 70 Ultra..
- Lifestyle இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- Finance பருவநிலை மாற்றத்தால் உலகமே வறுமையில் வாடப் போகிறது – எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?
ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா.
நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவுக்கு நடிகர் ஷாமும் வந்திருந்தார். பாலா படத்தில் நடிக்கும் கனவு தனக்கும் இருப்பதாகக் கூறினார் ஷாம்.
இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார்.
அத்துடன் ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன் என்றும், அவர் பட்ட சிரமத்துக்காகவே அடுத்த படத்தில் ஷாமுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்றும் கூறினார்.
ஜெயம் ரவிக்கும் நிச்சயம் வாய்ப்பு தருவதாகக் கூறிய பாலா, அவரது கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன், என்றும் தெரிவித்தார்.
ஆக ஜெயம் ரவியும் ஷாமும்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள்...