Don't Miss!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்?
ஜெயம் ரவி மற்றும் ஷாம் இருவருக்கும் தன் படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக பொது மேடையிலேயே அறிவித்துவிட்டார் இயக்குநர் பாலா.
நேற்று நடந்த ஒரு இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஜெயம் ராஜா, எப்படியாவது தன் தம்பி ஜெயம் ரவிக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என இயக்குநர் பாலாவிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த விழாவுக்கு நடிகர் ஷாமும் வந்திருந்தார். பாலா படத்தில் நடிக்கும் கனவு தனக்கும் இருப்பதாகக் கூறினார் ஷாம்.
இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார்.
அத்துடன் ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன் என்றும், அவர் பட்ட சிரமத்துக்காகவே அடுத்த படத்தில் ஷாமுக்கு வாய்ப்புத் தருகிறேன் என்றும் கூறினார்.
ஜெயம் ரவிக்கும் நிச்சயம் வாய்ப்பு தருவதாகக் கூறிய பாலா, அவரது கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன், என்றும் தெரிவித்தார்.
ஆக ஜெயம் ரவியும் ஷாமும்தான் பாலாவின் அடுத்த பட ஹீரோக்கள்...