பிஸி தயாரிப்பாளராகும் பாலா... அடுத்து சற்குணம் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்!
இயக்குநர் பாலாதான் இப்போது கோடம்பாக்கத்தில் பிஸியான தயாரிப்பாளர். லிங்குசாமி பாணியில் அடுத்தடுத்து மூன்று படங்களைத் தயாரிக்கிறார்.
பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிக்க, அவரது இயக்கத்தில் வந்த படம் பரதேசி. இந்தப் படத்துக்குப் பிறகு பாலா தயாரிக்கும் படத்தை மிஷ்கின் இயக்குகிறார். சமீபத்தில்தான் இந்தப் படத்துக்கு பூஜை போடப்பட்டது.

இப்போது தனது நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் ஏ சற்குணம் இயக்குகிறார்.
களவாணி, வாகை சூடவா, நய்யாண்டி படத்திற்கு பிறகு சற்குணம் இயக்கும் படம் இது. அதர்வா நாயகனாக நடிக்கிறார்.
ஜிப்ரான் இசையமைக்க மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஜூலை மாதம் படபிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற இருக்கிறது.
இன்னும் ஒரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறார் பாலா. இதில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











