Don't Miss!
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Lifestyle 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சண்டிவீரன் தலைப்புக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்கத் தயார்! - பாலா
சண்டி வீரன் படத் தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பினால், அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறேன் என இயக்குநர் பாலா கூறினார்.
பாலாவின் தயாரிப்பில், சற்குணம் இயக்கும் புதிய படம் ‘சண்டிவீரன்'. இதில் அதர்வா - ஆனந்தி நடிக்கின்றனர். அருணகிரி இசையமைக்கிறார்.
‘சண்டிவீரன்' என்பது சர்ச்சை தலைப்பு என்றும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் தயாரித்து இயக்கிய ‘சண்டியர்' பட தலைப்பை எதிர்த்தனர்.
இதுகுறித்து இயக்குநர் பாலா கூறும்போது, ‘‘டைரக்டர் சற்குணம் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்து போனது. அதர்வாவும் நல்ல கதைக்காக காத்து இருந்தார். எனவே அதர்வாவுக்காக இந்த படத்தை தயாரிக்க முன் வந்தேன்.
‘சண்டியர்' பட தலைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியதுபோல் சண்டிவீரன் தலைப்பில் நான் எடுக்கும் இந்த படத்துக்கும் எதிர்ப்புகள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன்,'' என்றார்.
இந்தப் படத்தின் கதை இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப் போனது தெரிந்ததும், கதையைக் கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம் அதர்வா.