Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாராட்டுகளைக் குவிக்கும் பாலாவின் பரதேசி!
இந்தப் படத்தில் நூறாண்டுகளுக்கு முந்தைய தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் இருண்ட வாழ்க்கையை படம்பிடித்துள்ளாராம் பாலா.
ரெட் டீ (எரியும் பனிக்காடு) என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள பரதேசியில், முரளி மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர்.
பொதுவாக ஒரு படத்தை முடிக்க ஆண்டுக்கணக்கில் எடுத்துக் கொள்ளும் பாலா, இந்தப் படத்தை மாதக்கணக்கிலேயே முடித்துவிட்டிருக்கிறார். பாலா எடுத்த படங்களில் குறுகிய காலத்தில் உருவான படம் என்ற பெயர் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.
இந்தப் படம் முடிந்து, பிப்ரவரி 15-ம் தேதி வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சிலர் 22-ம் தேதிதான் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் உறுதியாக எதையும் கூறவில்லை.
இந்த நிலையில் படத்தின் சிறப்புக் காட்சிகளை முக்கிய இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டி வருகிறார் பாலா.
படம் பார்த்த பாலாவின் குரு பாலு மகேந்திரா, பாலாவின் ஆகச் சிறந்த படைப்பு இதுவே என்று பாராட்டியுள்ளார். அப்ப விருது நிச்சயம் என திரையுலகம் பேச ஆரம்பித்துள்ளது.
பரதேசி பார்த்த இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப், "பாலாவின் படம் பரதேசி பார்த்தேன். நெகிழ்ந்துவிட்டன். அவரது பெஸ்ட் படம் இது," என்று பாராட்டியுள்ளார்.