Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இளையராஜா எடுத்த புகைப்படத்தை திருட ஆசைப்பட்ட பாலா!
இளையராஜா எடுத்த புகைப்படங்களின் கண்காட்சி பற்றிய சுவாரஸ்ய செய்திகளுக்குப் பஞ்சமில்லை.
சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை தினசரி பல விவிஐபிகள் வந்து பார்த்து பிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒளி ஓவியர்களான பாலு மகேந்திராவையும் பிசி ஸ்ரீராமையுமே பிரமிக்க வைத்திருக்கின்றன ராஜா எடுத்த பல புகைப்படங்களின் ஒளி அமைப்பும், கோணங்களும்.
இத்தனைக்கும் இவற்றையெல்லாம் ராஜா தன் காரில் அமர்ந்தபடிதான் எடுத்திருக்கிறார், பழைய பிலிம் கேமராவில். டிஜிட்டல் கேமராவை அவர் தொடுவதே இல்லையாம்.
நேற்று முன்தினம் கண்காட்சிக்கு வந்திருந்த இயக்குநர் பாலா, ராஜாவின் போட்டோக்களைப் பார்த்து வியந்து போய், கண்காட்சி பொறுப்பாளரிடம் அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களைக் கேட்டுக் கொண்டே வந்தாராம்.
ஒரு போட்டோவைப் பார்த்ததும், 'இது கிடைக்குமா' என்றாராம். 'கண்காட்சிக்காக வைத்திக்கிறார்கள்' என பொறுப்பாளர் சொல்ல, "இல்லை நீங்க அந்தப் பக்கம் போனதும் திருடிட்டுப் போகலாம்னு தோணுது" என்றாராம் பாலா, சீரியஸாக!