twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து படப்பிடிப்புகள் ரத்து- உடல் தகனம்!!

    By Mayura Akilan
    |

    சென்னை: உடல்நலக்குறைவால் நேற்று காலமான பழம்பெரும் இயக்குநர் பாலசந்தர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.

    சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இயக்குநர் கே.பாலசந்தர் செவ்வாய்க்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    Balachander's funeral likely today

    அவரது மறைவு செய்தி கேட்ட உடன் திரை உலக பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். பாலச்சந்தரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

    இயக்குநர் கே.பாலசந்தர் மறைவையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் அனைத்தும் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக இயக்குநர் விக்ரமன் அறிவித்துள்ளார்.

    இயக்குநர் பாலசந்தரின் உடல் இன்று மதியம் 2 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது. மாலை 4.30 மணியளவில் பெசன்ட் நகர் மின்மாயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்படும் என பாலசந்தரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    English summary
    A week after he was admitted in a private hospital, veteran filmmaker K Balachander passed away. His funeral is expected to be held on Wednesday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X