Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 3 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 4 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 4 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் தொடங்கிய கால் டாஸ்க்.. ஆரியை வெறுப்பேற்றும் பாலா.. வேண்டாத பேச்சு.. பீதியை கிளப்பும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கால் சென்டர் டாஸ்க் கடந்த வாரம் தொடங்கியது.
இதில் பாதி ஹவுஸ்மேட்ஸ் கால் சென்டர் ஊழியர்களாகவும் மீதி பாதி ஹவுஸ்மேட்ஸ் வாடிக்கையாளர்களாகவும் இருந்தனர்.
பாத்ரூமில் ரியோ செய்த காரியம்... வொர்ஸ்ட், பொறுக்கி என திட்டிய ரம்யா அன்ட் சோம்.. நடந்தது என்ன?

பிரச்சனையை தீர்க்க
வாடிக்கையாளராக இருந்த ஹவுஸ்மேட்ஸ், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பேசினர். ஹவுஸ்மேட்ஸ் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ரணகளமான வீடு
ஆனால் இந்த டாஸ்க்கால் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்ததே தவிர பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இந்த டாஸ்க்கால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. இந்த டாஸ்க்கை மையப்படுத்தியே பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன.

எதிராய் திருப்பினார்
கடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் நடந்த பிரச்சனைதான் பெரிதாக பார்க்கப்பட்டது. ஆரியை நேர்மையில்லாதவர் என காட்ட பாலாஜி மொத்த ஹவுஸ்மேட்ஸையும் அவருக்கு எதிராய் திருப்பினார்.

தட்டிக் கேட்கவில்லை
போதாகுறைக்கு வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்ற பாலாஜி, ஆரியை நோக்கி தனது காலை நீட்டி பேசினார். கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், காலை நீட்டி பேசியது குறித்தும் ஆரியை தரக்குறைவாக பேசியது குறித்தும் கொஞ்சம் கூட தட்டிக் கேட்கவில்லை.

தடவி கொடுத்த கமல்
சனத்தை அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அழகிப் பட்டத்தை வென்றார் என்று கூறியதற்கும், அதனை தொடர்ந்து தறுதலை என்றும் அவளே இவளே என்றும் கூறியது குறித்துமே கமல் பெரிதாக பாலாஜியை விசாரிக்கவில்லை. சாதாரணமாக தடவிதான் கொடுத்தார்.

நேர்மையில்லாதவர்..
அதே வேலையையே ஆரி விவகாரத்திலும் செய்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நேற்றைய எபிசோடிலும் கூட ஆரியை நேர்மையில்லாதவர், பொய் பேசுகிறார் என பல இடங்களில் பலரிடம் இழிவாக பேசினார்.

ஆரிக்கு கால் செய்து..
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் மீண்டும் கால் சென்டர் டாஸ்க் தொடங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் வாடிக்கையாளரான பாலாஜி, கால் சென்டர் ஊழியரான ஆரிக்கு கால் செய்துள்ளார்.

காலிப்பண்ணி விளையாட மாட்டேன்
அப்போது பேசும் பாலாஜி, ஹாய் பிரதர் நான் உங்களுடைய பெரிய ஃபேன். ஆனா பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே. நான் யாரையும் காலிப்பண்ணி விளையாட மாட்டேன். எல்லாரும் ஒன்னா வாங்க சேர்ந்து விளையாடலாம். அதுதான் என்னுடைய மெண்டாலிட்டின்னு அடிக்கடி சொல்வீங்க.

கெட்டவன்னு சொல்றவன நம்பலாம்
ஆரி யாரையும் காலி பண்ணி விளையாடனும்னு நினைக்கலையா? நான் கெட்டவன்னு சொல்றான்ல அவன நம்பிடலாம், நான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன கூட நம்பிடலாம். ஆனா நான் மட்டும்தான் நல்லவன்னு சொல்றான் பாருங்க அவன நம்பவே முடியாது.. இவ்வாறு பேசுகிறார் பாலாஜி.

முழுக்க முழுக்க பேக்கேஜ்
நேற்றைய எபிசோடில் நான் ஆரியுடனான எல்லா பேக்கேஜையும் கழட்டி வைத்துவிட்டேன். ஆனால் அவர்தான் பேக்கேஜ் வைத்திருக்கிறார் என்று கூறினார் பாலாஜி. ஆனால் இன்றைய கால் டாஸ்க்கில் அவர் பேசுவதை பார்க்கும்போது முழுக்க முழுக்க பேக்கேஜ் வைத்துக்கொண்டு வேண்டும் என்றே பேசுவது தெரிகிறது.

எப்படி பதில் சொல்லப் போகிறார்?
பாலாஜியிடம் பேக்கேஜ் இல்லாவிட்டால் இப்படி பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி வருகின்றனர். பாலாஜி பேசும் ஒவ்வொரு வார்த்தையுமே ஆரியை வெறுப்பேற்றும் வகையிலேயே உள்ளது. பாலாஜியின் கேள்விக்கு ஆரி எப்படி பதில் அளிக்கப் போகிறார் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.