Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷிவானியை அலேக்காய் தூக்கிச்சென்ற பாலா.. ரம்யாவை தூக்கிச் சென்ற சோம்.. நல்லா பிரிச்சுக்கிட்டாங்கப்பா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரோப் டாஸ்க்கை முடித்து கீழே விழுந்த ஷிவானி மற்றும் ரம்யாவை பாலாஜியும் சோமும் அலேக்காய் தூக்கிச் சென்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் வாரம் ஃபினாலே வாரமாக இருக்கவுள்ளது.
இதனை முன்னிட்டு நேரடியாக ஃபினாலேவுக்குள் செல்லும் ஒரு வாய்ப்பு ஒரு போட்டியாளருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஃபினாலே டிக்கெட்
இதற்கான டிக்கெட்டை பெற 9 டாஸ்க்குகள் நடத்தப்பட்டன. இதில் அதிக மதிப்பெண்களை பெறும் போட்டியாளரே ஃபினாலேவுக்கான டிக்கெட்டை பெற முடியும் என அறிவிக்கப்பட்டது.
ரம்யாவும் ஷிவானியும்
இந்நிலையில் இதற்கான இறுதி டாஸ்க்காக ரோப் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஆண் போட்டியாளர்களே தாக்குப் பிடிக்க முடியாமல் விட்டுச் சென்ற நிலையில், ஷிவானியும் ரம்யாவும் கடைசி வரை தாக்குப்பிடித்தனர்.
கயிரை விட்ட ரம்யா
இதற்காக சிங்கப் பெண்ணே பாடலை போட்டு பெருமை படுத்தினார் பிக்பாஸ். இதனைக் கேட்டு எமோஷனலாகி கண்ணீர்விட்டனர் இருவரும். இந்நிலையில் இந்த டாஸ்க்கில் 4 மணிநேரம் 46 நிமிஷம் கடந்த நிலையில் ரம்யா கயிரை விட்டு கீழே விழுந்தார்.
பதறிய ஹவுஸ்மேட்ஸ்
அவரை தொடர்ந்து 4 மணிநேரம், 48 நிமிஷம் நின்ற ஷிவானியும் கயிரை விட்டு பொத்தென கீழே விழுந்தார். இதனை பார்த்து பதறிய ஹவுஸ்மேட்ஸ் அவர்களை ஆசுவாசப்படுத்தினர்.
ஷிவானியை தூக்கிய பாலாஜி
பின்னர் பாலாஜி, ஷிவானியையும் சோம் ரம்யாவையும் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் நல்லா பிரிச்சுக்கிட்டீங்கய்யா என்ற கிண்லடித்து வருகின்றனர்.