Don't Miss!
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா!
சென்னை: குடும்பமா விளையாடுறாங்க அதற்கு நான் விடமாட்டேன் என அர்ச்சனா அன்ட் கேங்குக்கு எதிராக சபதம் எடுத்துள்ளார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என்பது பார்வையாளர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால் ரியோ அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.
குரூப்பிஸம் இருக்கு என்று கூறிய சுரேஷ் சக்கரவர்த்தியிடமும் மல்லுக்கு நின்றார். இதனாலேயே சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்தார் ரியோ.
இது காமெடியா? இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற!
விலகாமல் உள்ளார்
ஆனால் ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம்சேகர், ஜித்தன் ரமேஷ் ஆகியோரை விட்டு வெளியே வருவதேயில்லை. என்னதான் குரூப்பிஸம் இல்லை என்று ரியோ கூறினாலும் குரூப்பை விட்டுக்கொடுக்காமல் விலகாமல் இருக்கிறார்.
குரூப்பிசம் பற்றி..
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனிதா, பாலாஜி, ஆரி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் குரூப்பிசத்தை பற்றி அவர்கள் விவாதித்தனர்.
விட்டுக்கொடுத்தேன்
குறிப்பாக அர்ச்சனா, ரியோ, நிஷா ஆகியோரின் கேங்க் குறித்து பேசினர். தொடர்ந்து பேசிய ஆரி, ரியோவுக்கு தான் கேப்டன் டாஸ்க்கில் விட்டுக் கொடுத்ததாக கூறினார். மேலும் அந்த 5 பேருக்காக விளையாடாமல் உனக்காக விளையாட வேண்டும் என்று கூறியதாகவும் கூறினார் ஆரி.
நான் விட மாட்டேன்
அதனைக் கேட்ட பாலாஜி ரிலேஷன்ஷிப்ப வச்சு, எல்லோரையும் மெண்டலி பிளாக் பண்றாங்க. குடும்பமா விளையாடலாம்னு பார்க்குறாங்க.. அதுக்கு நான் விட மாட்டேன் என்று சபதம் எடுத்தார் பாலாஜி.