Don't Miss!
- News மோடி பற்றி வந்து விழுந்த கேள்வி.. டக்கென கையெடுத்து கும்பிட்டு உதயநிதி ஸ்டாலின் சொன்ன வார்த்தை!
- Automobiles நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- Finance 290% லாபம் தந்த கட்டுமான நிறுவனம்.. விஜய் கேடியா விற்பனை செய்த பங்குகளை வாங்கலாமா..!!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரிலேஷன்ஷிப்ப வச்சு குடும்பமா விளையாட பாக்குறாங்க.. நான் விடமாட்டேன்.. சபதம் எடுத்த பாலா!
சென்னை: குடும்பமா விளையாடுறாங்க அதற்கு நான் விடமாட்டேன் என அர்ச்சனா அன்ட் கேங்குக்கு எதிராக சபதம் எடுத்துள்ளார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என்பது பார்வையாளர்களுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆனால் ரியோ அதை ஒப்புக்கொள்ளவே இல்லை.
குரூப்பிஸம் இருக்கு என்று கூறிய சுரேஷ் சக்கரவர்த்தியிடமும் மல்லுக்கு நின்றார். இதனாலேயே சுரேஷ் சக்கரவர்த்தியை டார்கெட் செய்தார் ரியோ.
இது காமெடியா? இதுக்கு பேக் கிரவுண்ட் மியூஸிக் வேற.. உன் புராடெக்ட்ஸ் எப்டிலாம் சில்லறையை செதறவிடுற!
விலகாமல் உள்ளார்
ஆனால் ரியோ, அர்ச்சனா, நிஷா, சோம்சேகர், ஜித்தன் ரமேஷ் ஆகியோரை விட்டு வெளியே வருவதேயில்லை. என்னதான் குரூப்பிஸம் இல்லை என்று ரியோ கூறினாலும் குரூப்பை விட்டுக்கொடுக்காமல் விலகாமல் இருக்கிறார்.
குரூப்பிசம் பற்றி..
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அனிதா, பாலாஜி, ஆரி ஆகியோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் குரூப்பிசத்தை பற்றி அவர்கள் விவாதித்தனர்.
விட்டுக்கொடுத்தேன்
குறிப்பாக அர்ச்சனா, ரியோ, நிஷா ஆகியோரின் கேங்க் குறித்து பேசினர். தொடர்ந்து பேசிய ஆரி, ரியோவுக்கு தான் கேப்டன் டாஸ்க்கில் விட்டுக் கொடுத்ததாக கூறினார். மேலும் அந்த 5 பேருக்காக விளையாடாமல் உனக்காக விளையாட வேண்டும் என்று கூறியதாகவும் கூறினார் ஆரி.
நான் விட மாட்டேன்
அதனைக் கேட்ட பாலாஜி ரிலேஷன்ஷிப்ப வச்சு, எல்லோரையும் மெண்டலி பிளாக் பண்றாங்க. குடும்பமா விளையாடலாம்னு பார்க்குறாங்க.. அதுக்கு நான் விட மாட்டேன் என்று சபதம் எடுத்தார் பாலாஜி.