Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதும் கீழே விழுந்து கதறிய பாலாஜி.. காரணம் என்ன தெரியுமா?
சென்னை: எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டதும் கதறியழுதார் பாலாஜி.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த திங்கள் கிழமை கடைசி நாமினேஷன் நடைபெற்றது. ஹவுஸ்மேட்ஸ் சக போட்டியாளர்களை ஓபன் நாமினேஷன் செய்தனர்.
ஆனால் இதில் ஒரு சிலர் தப்பித்தனர். இதனை தொடர்ந்து பேசிய பிக்பாஸ் இது கடைசி வாரம் என்பதால் எல்லோருமே நாமினேஷனில் இடம் பெறுவதாக கூறினார்.
நேரடியாக ஃபினாலே
இதனால் அனைத்து போட்டியாளர்களுமே நாமினேஷனுக்கு வந்தனர். இதனிடையே 9 ரவுண்டுகளாக நடைபெற்ற டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் அதிக பாயிண்ட்ஸ்களை எடுத்த சோம் நேரடியாக ஃபினாலேவுக்குள் நுழைந்தார்.
முதல் ஃபைனலிஸ்ட் ஆரி
இதனை நேற்றைய எபிசோடில் அறிவித்த கமல் சோம சேகருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து மக்களால் காப்பாற்றப்பட்ட முதல் ஃபைனலிஸ்ட்டாக ஆரியின் பெயரை அறிவித்தார் கமல்.
யாரு இறுதிக்கட்டத்துக்கு?
இந்நிலையில் இன்றைய எபிசோடில் இரண்டாவதாக மக்களால் காப்பாற்றப்பட்ட போட்டியாளர் யார் என்பதை பல டிவிஸ்ட்டுகளுடன் அறிவித்தார் கமல். அதாவது, அடுத்தது மக்களால் காப்பாற்றப்பட்டு இறுதிக்கட்டத்துக்கு முன்னேற போகும் போட்டியாளர் யார் என்று கேட்டார் கமல்.
ரம்யா காமெடி
தொடர்ந்து பேசிய கமல், இடைவேளைக்கு பிறகு என்று சொல்வது ரொம்ப பழையது என்றார். அப்போது குறுக்கிட்ட ரம்யா பிரேக்குன்னு சொல்லப்போறீங்களா என்று கேட்டு காமெடி செய்தார்.
பாலாஜி கொடுத்த ஜருக்கு
அதற்கு பதில் கூறிய கமல், இடைவேளையும் வேண்டாம் பிரேக்கும் வேண்டாம்.. சொல்லிடலாம்.. என்ன பாலாஜி என்றார் கமல். தன்னுடைய பெயரை கேட்டதுமே பாலாஜி ஒரு ஜருக் கொடுத்தார்.
நினைச்சது சரிதான்
அவரது ரியாக்ஷனை பார்த்த கமல், அப்படின்னா என்ன.. பெயரைக் கேட்டதுமே நானா இருக்குமோன்னு நினைச்சுட்டீங்களா பாலாஜி என்றார். அதற்கு பாலாஜி ஆமாம் என தலையை ஆட்ட.. நினைச்சது சரிதான் என்ற கமல், நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள் என்றார்.
கதறி அழுத பாலாஜி
இதனைக் கேட்ட பாலாஜி, அழுதப்படியே கீழே விழுந்து ஆரியை போல் தரையை தட்டினார். அவரை தூக்கி கட்டியணைத்தார் ஆரி. பின்னர் எழுந்து நின்றும் கைகளை கூப்பி கமலுக்கு அழுதப்படியே நன்றி கூறினார் கமல்.
அதற்காகதான் அழுதேன்
தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸிடம் பேசிய பாலாஜி, டைட்டில் வின் பண்ணனும்னு நான் வரல. என்னை கெட்டவன்னு நினைச்சுடுவாங்களோ தப்பானவன்னு நினைச்சுடுவாங்களோன்னு பயந்துட்டேன் என்றார். இந்த வாரம் என்னை அனுப்பி விடுவார்கள் என்று தோன்றியது என்று தான் அழுததுக்கான காரணத்தை கூறினார் கமல்.