Don't Miss!
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பிரேக்கப்புக்கு பிறகு இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி!
சென்னை: பிரேக்கப்புக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில்தான் தான் அதிகமாக கோபப்பட்டிருக்கிறேன் என தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்தார் பாலாஜி.
பிக்பாஸ் நிகழ்ச்சி கடைசி வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை சண்டை சச்சரவுகள் என இருந்த நிலையில் இந்த வாரம் எண்டேர்டெயின்மென்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரம்தான் கடைசி வாரம் என்பதால் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களை நல்லவராக காட்டிக் கொள்ள வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகின்றனர்.
கெட்டவனா நினைச்சுடுவீங்களோன்னு..
அந்த வகையில் இன்றைய எபிசோடில் முதல் ஆளாய், தனியாக சென்று தானாக கேமராவிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் பாலாஜி. கிட்சன் ஏரியாவில் உள்ள கேமராவில் பேசிய பாலாஜி, என்னை கெட்டவனா நினைச்சுடுவீங்களோன்னு பயந்துட்டேன்.
ஒதுங்கிதான் போயிருக்கேன்
கோபத்துல வார்த்தையை விட்டுட்டுடேன். 5 வருஷத்துக்கு முன்னாடி தான் பிரேக்கப் ஆனப்போ ரொம்ப டிப்ரஷன் ஆகி இப்படி கோபப்பட்டிருக்கேன். அதுக்கப்புறம் பிரச்சனை என்று வந்தாலே ஒதுங்கிதான் போயிருக்கேன்.
கோபம் வந்துவிட்டது
ஆனால் உழைச்சதுக்கு அங்கீகாரம் கொடுக்காமல் சோம்பேறி என்று கூறியதால் கோபம் வந்துவிட்டது. கல்ட்சர மதிக்காதவன்னா கோவம் வரும். எல்லாரையும் தூக்கிவிட்டு விளையாடிதான் பழக்கம்.
புதுசா பிறந்த மாதிரி இருக்கு
ஆனா இங்க கோபப்பட்டது எனக்கே குழப்பம் வந்துடுச்சு. என்னை காப்பாத்திட்டிங்க.. எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.. புதுசா பிறந்த மாதிரி இருக்கு.. புது கான்ஃபிடன்ஸ் வந்திருக்கு.. இவ்வாறு கேமரா முன்பு பேசினார் பாலாஜி.