Don't Miss!
- Sports ஐபிஎல்- முத்துப்பாண்டி கோட்டைக்குள் புகுந்து தட்டி தூக்கிய கில்லி கோலி.. SRH-ஐ வீழ்த்திய RCB
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Automobiles இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- News "மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கணும்.." டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு.. நாளை விசாரணை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இதிலேயும் பொய்யா பாலா.. அன்னைக்கு தங்கச்சி பாவம்னு சொன்னாரு.. இன்னைக்கு இப்படி வழியுறாரே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கேப்ரில்லாவுக்கு ரூட்டு விடும் பாலாஜி முருகதாஸை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சில் லவ் மூட் ஸ்டார்ட்டாகியுள்ளது. முதல் காதல் ஜோடிகளாக பாலாஜி முருகதாஸையும் கேப்ரில்லாவையும் கோர்த்து விட்டுள்ளனர்.
புரமோவிலேயே யாரோ யாருக்குள் இங்கு யாரோ என்ற பாடலை போட்டு இருவரின் காதலையும் உறுதிப்படுத்திவிட்டனர்.
அட கடவுளே.. பாவம்டா ஷிவானி செல்லம்.. இதயத்த உடைச்சீங்க.. இப்போ இப்படி பண்ணீட்டீங்களே.. கதறும் ஆர்மி!
காதல் வராமல்
இதனை பார்த்த நெட்டிசன்கள் இன்னும் காதல் மட்டும்தான் பாக்கியாக இருந்தது, இதுவரை யாருக்கும் காதல் வராமல் இருக்கிறதே என ஆச்சரியப்பட்டோம். தற்போது இருவரையும் கோர்த்து விட்டுவிட்டீர்களே என கூறி வந்தனர்.
தங்கச்சி பாவம்
பால் போடும் டாஸ்க்கின் போது, ஜித்தன் ரமேஷ் பாலாஜியிடம் யாரை வெளியே அனுப்பலாம் என கேட்டார். அப்போது கேப்ரில்லாவை வெளியே அனுப்புங்கள் என்றார். ஆனால் அடுத்த வினாடியே வேண்டாம் வேண்டாம் தங்கச்சி பாவம் என்றார்.
டபுள் மீனிங்கில்..
இந்நிலையில் தற்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. ஓரப் பார்வை பார்ப்பதும், வெட்கத்தில் தலை குனிவதும், டபுள் மீனிங்கில் பேசிக்கொள்வதும் என வேற மாதிரி சென்றுக் கொண்டிருக்கிறது.
பொய் சொன்ன பாலாஜி
ஏற்கனவே பாலாஜி முருகதாஸ் கஷ்டப்படும் குடும்பம், அப்பா அம்மா குடிக்காரர்கள், நண்பர்களின் உதவியோடு வளர்ந்ததாக கூறினார். ஆனால் அவர் சொன்னதெல்லாம் பொய். அனுதாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொன்னார் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது.
Recommended Video
இதிலும் பொய்யா?
இந்நிலையில் காதல் விஷயத்திலும் பாலாஜி முருகதாஸூக்கு அதே இரண்டு முகம் தானா. அன்று தங்கை என்றார். இன்று இப்படி வழிகிறாரே என விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் கேப்ரில்லாவுக்கு இது தேவையில்லாத வேலை என்றும் கேப்ரில்லா தான் எல்லை மீறி பழகுகிறார் என்றும் கூறி வருகின்றனர்.