Don't Miss!
- Finance பெங்களூரு டிராபிக்: மலைப்போல நம்பப்படும் புதிய சேவை.. இதுமட்டும் நடந்துட்டா, வேற லெவல் தான்..!!
- News "டிட்டோ" கருணாநிதி.. கலைஞரை ஞாபகப்படுத்துகிறார் உதயநிதி.. இது புதிய மைல்கல்.. திமுகவுக்கு மகிழ்ச்சி
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெளியே வந்தும் சர்ச்சை.. குரைக்கும் நாய் கடிக்காது.. ஜோ மைக்கேலுடன் செம மல்லுக்கட்டில் பாலாஜி!
சென்னை: ஜோ மைக்கேல் மற்றும் பாலாஜி முருகதாஸ் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிலேயே அதிக விமர்சனத்துக்கு உள்ளானவர் பாலாஜி முருகதாஸ். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகும் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
தொப்புள் கொடியை போலவே வலிமையானது தேசிய கொடி.. புலிப்பெண்ணாக மாறிய ’பிகில்’ பாண்டியம்மா!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தான் பெற்ற பட்டங்கள் குறித்து பேசினார். அப்போது சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டியை டுபாக்கூர் பெஜன்ட் என்றார்.
காட்டாத விஜய் டிவி
மேலும் காம்ப்ரமைஸ் செய்தும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தும் தான் சனம் ஷெட்டி அந்த அழகிப்போட்டியில் வென்றார் என்றும் கூறினார் பாலாஜி. ஆனால் அதனை விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாமல் பாலாஜியை காப்பாற்றியது.
ஜோ மைக்கேல் கண்டனம்
அது பின்னர்தான் தெரியவந்தது. ஆனால் டுபாக்கூர் பெஜன்ட் என்று கூறியது மட்டும் ஒளிபரப்பானது. இதுதொடர்பாக கமலே பாலாஜியை கண்டித்தார். பாலாஜியின் இந்த பேச்சுக்கு அந்த அழகிப் போட்டியின் ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல், கண்டனம் தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்க வேண்டும்
மேலும் தங்களின் அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப்போட்டி என்று கூறியது குறித்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அதற்கான எதிர் வினையை அவர் சட்டப்படி சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
பர்சனல் நம்பருக்கும்..
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு இது தொடர்பாக ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜோ மைக்கேல், சம்மன் பாலாஜியின் வீட்டுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது. அவருடைய பர்சனல் நம்பருக்கும் அனுப்பப்பட்டு விட்டது என்று கூறினார்.
குரைக்கும் நாய் கடிக்காது
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாலாஜி முருகதாஸ், ஜோ மைக்கேலிடம் போனில் பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையில் எந்த உடன் பாடும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது. இதனை தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் குரைக்கும் நாய் கடிக்காது என்ற ஆங்கில பழமொழியை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
புரூவ் பண்ண துப்பில்ல
இதற்கு பதில் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல் உள்ள சொன்னத புரூவ் பண்ண துப்பில்ல.. இதுல இங்கிலிஷ் பழமொழி வேற என பதிவிட்டுள்ளார். மேலும் விரைவில் பாலாஜியும் தானும் போனில் பேசிய உரையாடல் வெளியிடப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.
|
டுபாக்கூர் எக்ஸ்போஸ்டு..
மேலும் முழு ஆடியோ உரையாடலும் யூட்யூப்பில் அப்லோட் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ள ஜோ மைக்கேல், குரைக்கும் நாய்கள் என பாலாஜி கூறியதை குறிப்பிட்டு ஸ்மைலிகளை பதிவிட்டுள்ளார். அதோடு டுபாக்கூர் வெளியே தெரிந்துவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார்.
நாளைக்கு ஸ்க்ரீன்ஷாட்ஸ்..
தனது மற்றொரு டிவிட்டில் ஓ.. பிக்பாஸ் போய் ரன்னர் ஆகிறது என்னமோ ஒலிம்பிக்ல கோல்டு அடிக்கிறதா... நான் வொர்த் இல்ல.. நாளைக்கு காலை பாலாஜி முருகதாஸின் ஸ்க்ரீன்ஷாட், பெண்கள் மீதான அவருடைய உண்மையான கேரக்டர் ரிலீஸ் செய்யப்படும் என பதிவிட்டுள்ளார்.