Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அர்ச்சனாவையும் நிஷாவையும் கட்டிப்பிடித்த பாலா.. அடிச்சிக்க வேண்டியது.. அப்புறம் இப்படி.. கொடுமை!
சென்னை: பொண்ணுங்க பின்னாடியே ஆரி இருக்கார் என குரூப்பா உட்கார்ந்து பேசிய பாலா, கமல் சார் சாட்டையை சுழற்றிய பிறகு, நிஷா மற்றும் அர்ச்சனாவிடம் மட்டுமே மன்னிப்பு கேட்டது விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மூன்று பேர் குரூப் என முதலில் சொல்லிக் காட்டிய பாலா, ரியோவிடமும் சென்று ஏன் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.
அர்ச்சனா அப்படி அடித்துக் கொள்ளும் அளவுக்கு பேசிவிட்டு, பாலா வந்து கட்டிப் பிடிக்க வேண்டும் என ஆசைப்படுவது எல்லாம் கடுப்பேற்றுகிறது.
பங்கம் பண்ணிய அர்ச்சனா
பாலாவுக்கு கஸ்டமர் கேர் டாஸ்க்கின் போது முதல் ஆளாக வந்து அர்ச்சனா பேசினார். அர்ச்சனா ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு பாலாவுக்கும் பிக் பாஸ் வீட்டில் உள்ள மத்த ஹவுஸ்மேட்களுக்கும் நல்லாவே சிண்டு முடிந்தார். வெளியே வந்த பிறகும், அது பயங்கர சண்டையாகவே முடிந்தது.
கால் மீ அர்ச்சனா
வெளியே வந்த பாலாவிடம் சோமசேகர், கேபி, ரியோ என ஒவ்வொருவராக ரவுண்டு கட்டி தங்களை பற்றி அப்படி எப்படி பேசலாம் என வெளுத்து வாங்கினர். அர்ச்சனாவும் பாலாவின் பதில்களால் கடுப்பாகி இருந்த நிலையில், அர்ச்சனா அக்கா இல்லை. கால் மீ அர்ச்சனா என சொன்னவுடன், சரி அர்ச்சனா என பாலா அர்ச்சனாவை பஞ்சர் பண்ணிவிட்டு சென்றார்.
கமல் முன்னாடி நடிக்கிறாரு
வாரம் முழுவதும் வீட்டுக்குள் அடங்காத ஆளாக திரியும் பாலா, கமல் வரும் போது மட்டும் நல்ல பிள்ளையா, அடக்கமான ஆளாக மாறி அவரிடம் பாராட்டுக்களை அள்ளும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார். வாரம் முழுவதும் பாலா என்ன பண்றாருன்னு கமல் பார்க்க மாட்டாருன்னு நினைச்சிட்டாரோ!
ஒருத்தருக்கு பின்னாடி
நிஷாவை டார்கெட் பண்ணி ஒருத்தருக்கு பின்னாடியே விளையாடுறாங்க என பாலா வைத்த குற்றச்சாட்டு விசாரிக்கப்பட்டது. அதற்கு தெளிவாக நிஷாவும் அர்ச்சனாவும் நாங்க தெளிவா எங்க கேமை தான் விளையாடுறோம். நிஷாவுக்காக நானோ, அர்ச்சனாவுக்காக நிஷாவோ விளையாடவில்லை என்றனர். நிஷாவும் தன்னோட கேமை யாருக்காகவும் விட்டுத் தர மாட்டேன் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார்.
நிஷாவை கட்டிப்பிடித்து
கமல் சார் பிரேக் விட்ட கேப்பில், கார்டன் ஏரியாவில் நிஷாவை பார்த்த பாலா, நீங்க ஜெயிக்கணும் என சொல்லி விட்டு அவரை கட்டிப்பிடித்து சமாதான பேச்சுவார்த்தை செய்தார். அருகே அர்ச்சனாவும் பாலாவை ஏக்கத்துடன் பார்த்து நம்மிடம் பேச மாட்டானா என தாயுள்ளத்தோடு காத்திருந்தார்.
பாலாவால் கடக்க முடியல
அர்ச்சனாவை அப்படியே கடந்து போய் விடலாம் என நினைத்த பாலாவால், அர்ச்சனாவின் அன்பு அம்பை தாண்டி கடந்து செல்ல முடியவில்லை. அர்ச்சனாவையும் வந்து கட்டிப்பிடித்து, இந்த வாரம் போட்ட அப்படியொரு சண்டைக்கு சமாதானம் செய்து கொண்டனர். இவங்க ரெண்டு பேரும் பண்ணும் கூத்தத்தை தான் பிக் பாஸ் ரசிகர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
லவ் யூ அவுட்சைட்
மேலும், லவ் யூ பாலா என அர்ச்சனா அக்கா சொன்னதும், லவ் யூ அவுட்சைட் என பாலா அதிரடியாக சொல்லி விட்டு அர்ச்சனாவின் அன்பு வலையில் சிக்காமல் தான் எஸ்கேப் ஆகி விட்டேன் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். பாலாவுக்கு உண்மையில் அர்ச்சனாவின் அன்பு மேல் பொறாமை தான். ரியோவுக்கும், சோமுவுக்கும் அதிகமாக கொடுக்கிறார் என்கிற பொறாமை.
மீண்டும் சண்டை தான்
எப்படியோ மீண்டும் சண்டை தான் போடப்போறீங்க, அப்படி அடிச்சிக்கிறது, அப்புறம் இப்படி கூடிக்கிறது என்றால் என்ன அர்த்தம். நல்லா டிராமா பண்றீங்க இருவரும் என அர்ச்சனாவையும், பாலாவையும் பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அன்பு ஜெயிக்கும் என நம்புறீங்களா என கமல் சாரே அர்ச்சனாவை ட்ரோல் பண்ணிய நிலையில், ரசிகர்களும் வச்சு விளாசி வருகின்றனர்.
Recommended Video
ரியோ மேல பயம்
ஆரி அண்ணன் பொம்பளைங்க பின்னாடியே இருக்காரு, என சம்யுக்தா, ஷிவானி, அனிதா சம்பத், சனம் ஷெட்டி சூழ் உலகுக்குள் இருந்து கொண்டு பாலா சொல்வதையும் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர். நிஷா மற்றும் அர்ச்சனாவிடம் சமாதானம் செய்து கொண்ட பாலா, ரியோவிடமும் அதே போல சமாதானம் செய்து கொள்ளவில்லையே ஏன்? என்கிற கேள்வியும், பாலாவுக்கு ரியோ டஃப் ஆன போட்டியாளர் என்கிற பயத்தால் தான் அவரை காலி பண்ணும் முனைப்பில் எப்போதும் இருக்கிறார் என்றும் தெரிகிறது.