twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காரித்துப்பி விளையாடாதீங்க ஆரி.. நானும் காரித்துப்பிட்டேன் சாரி.. மீண்டும் எல்லை மீறிய பாலாஜி!

    |

    சென்னை: கொடுக்கப்பட்ட வாக்கியம் யாருக்கு பொருந்துமோ அவருக்கு அதை பொருத்த வேண்டும் என்கிற 8வது டாஸ்க்கில், மீண்டும் எல்லை மீறி வார்த்தைகளை விட்டார் பாலாஜி முருகதாஸ்.

    காரித்துப்பி விளையாடாதீங்க.. நானும் பதிலுக்கு காரித்துப்பிட்டேன் சாரி என அவர் பேசிய வார்த்தைகளை பிக் பாஸ் ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

    "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" திருக்குறள் வாக்கியம் பாலாவுக்கு கிடைத்த நிலையில், மீண்டும் ஒரு வடுவை உண்டாக்கி சென்றார்.

    8 மாத குழந்தையையும் பிக் பாஸ் பார்க்க வைத்த ஆரி.. கமல் பிரசாரத்திலும் எகிறிய கிரேஸ்.. வேற லெவல்!8 மாத குழந்தையையும் பிக் பாஸ் பார்க்க வைத்த ஆரி.. கமல் பிரசாரத்திலும் எகிறிய கிரேஸ்.. வேற லெவல்!

    ரூபம் செம்மை செய்

    ரூபம் செம்மை செய்

    ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும், அங்கே உள்ள வாக்கியத்தில் யாருக்கு எந்த வாக்கியம் பொருந்தும் என்பதை காரணத்தோடு விளக்கி கொடுக்க வேண்டும். ஹவுஸ்மேட்கள் யாருக்கு அதிகமாக ஒரு வாக்கியத்தை சொல்றாங்களோ அவர்களுடைய கட்டவுட்டில் அந்த வாக்கியம் பொருத்தப்படும். பாலாவுக்கு ரூபம் செம்மை செய் என்கிற வாக்கியத்தை முதலாவதாக ஹவுஸ்மேட்கள் கொடுத்தனர்.

    துன்பம் மறந்திடு

    துன்பம் மறந்திடு

    துன்பம் தான் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் தம்பி, அதை நீ கடந்து விட்டால், நல்ல உயரத்தை அடையாளம் அதனால், பாலாவுக்கு நான் இந்த துன்பம் மறந்திடு வாக்கியத்தை தருகிறேன் என ஆரி கூறினார். மற்ற ஹவுஸ்மேட்களும் பாலாவுக்கு அதை கொடுத்தனர். கடைசியாக அந்த வாக்கியமும் பாலாவுக்கு வந்து சேர்ந்தது.

    கோதாட் டொழி

    கோதாட் டொழி

    அவுட் ஆஃப் தி பாக்ஸ் கேம் ஆடுவது ரொம்ப எக்ஸ்ட்ரீமா போய் பாலாவுக்கே ஆப்பாக அமைந்து விடுகிறது என ரியோவும், குற்றமானா விளையாட்டை விளையாடக் கூடாது என்று மற்ற பிற ஹவுஸ்மேட்களும் கூறி ரூல்ஸை மதிக்காமல் விளையாடும் பாலாவுக்கு அந்த வாக்கியத்தை கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட பாலா, அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்கை மாற்றிக் கொள்ள முடியாது என்று சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டார்.

    தீயினால் சுட்டப்புண்

    தீயினால் சுட்டப்புண்

    நேற்றைய நிகழ்ச்சியில் கடைசி வாக்கியமாக "தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" என்கிற திருக்குறள் வந்தது. அதை நான் பாலாவுக்குத் தான் தருகிறேன், அவர் இந்த வீட்டில் ஏகப்பட்ட தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களை காயப்படுத்தி உள்ளார் என்றார். ரியோ, சோம், கேபியும் பாலாவுக்கு அதை கொடுத்தனர்.

    காரித்துப்பி விளையாடாதீங்க

    காரித்துப்பி விளையாடாதீங்க

    ஒருத்தர் உங்களை காரித்துப்பினால், நீங்களும் பதிலுக்கு காரித்துப்ப வேண்டாம்னு ஆரி சொன்னார். அவர் என்னை பல முறை காரித்துப்பி விளையாடி இருக்கார். நான் பதிலுக்கு காரித்துப்பி விளையாண்டதுக்கு சாரி என பாலா அந்த வாக்கியத்தை ஆரிக்கு கொடுத்து மீண்டும் ஒரு வடுவான வார்த்தையை பேசிவிட்டார்.

    ஷிவானி யார் பக்கம்

    ஷிவானி யார் பக்கம்

    கண்டிப்பா இதை நான் பாலாவுக்குத் தான் கொடுப்பேன் என அந்த திருக்குறளை பாலாவுக்கு கொடுத்த ஷிவானி, ஆரி பேசும் தப்பான வார்த்தைகளை, இவருடைய கோபம் இன்னும் அதிகமான தப்பான வார்த்தைகளை பயன்படுத்த வைத்து அதை மட்டு செய்து விடுகிறது என பாலாவுக்கே கடைசியில் சப்போர்ட் செய்து விட்டார். ரம்யாவும் ஆரிக்கு எதிராகவே அதை கொடுத்தாலும், கடைசியில் பாலாவுக்கே அந்த வாக்கியம் சென்றது.

    கமல் கண்டிப்பாரா

    கமல் கண்டிப்பாரா

    பாலாஜி முருகதாஸ், கண்டபடி திட்டுவதும், பின்னர் சென்று மன்னிப்பு கேட்டுவிடுவதையே ஸ்ட்ராட்டஜியாக கொண்டுள்ளார். வியாழன் இரவு எபிசோடில், "காரித்துப்பி" என்கிற கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தை மீண்டும் பயன்படுத்தியதற்காக கமல் அவரை கண்டிப்பாரா? என்கிற கேள்வியும் கண்டிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    English summary
    Balaji Murugadoss used abusive language over Aari in latest episode too. Bigg Boss Fans wants Kamal will address the issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X