Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விளையாட விடாமலே வின் பண்ண பார்த்த பாலாஜி.. வேண்டுமென்றே ஆரியிடம் வம்பு.. விளாசும் ரசிகர்கள்!
சென்னை: விளையாட விடாமலே ஆரியின் காயினை எடுத்து அவரை தூண்டி விட்டார் பாலாஜி.
பிக்பாஸ் வீட்டில் அடுத்த வாரம் ஃபினாலே வாரமாக இருக்க உள்ளது.
இதனால் அனைத்து ஹவுஸ்மேட்ஸும் நேரடியாக நாமினேஷனுக்கு வந்துள்ளனர்.
டிக்கெட் டூ ஃபினாலே
இந்நிலையில் ஃபினாலே வாரத்திற்கு நேரடியாக செல்ல ஹவுஸ்மேட்டுகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது டாஸ்க்
இதில் அனைத்து டாஸ்க்குகளிலும் வெற்றி பெறும் ஒரு நபர் இந்த வார எவிக்ஷனில் இருந்து தப்பித்து ஃபினாலே வாரத்திற்குள் நுழைவார். இதில் நேற்று இரண்டு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது டாஸ்க்கு கொடுக்கப்பட்டது.
வெல்குரோ காய்ன்ஸ்
அதன்படி ஹவுஸ்மேட்ஸ்களுக்கு லைஃப் ஜாக்கெட் கொடுக்கப்பட்டு முதுகில் ஒட்டும் வெல்குரோ காய்ன்ஸ் கொடுக்கப்பட்டது. இதனை ஹவுஸ்மேட்ஸ் தங்களின் முதுகில் ஒட்டிக்கொள்ள வேண்டும்.
கேமை கெடுத்த பாலாஜி
அவற்றில் அதிக காயின்களை கலெக்ட் செய்யும் போட்டியாளர் வெற்றியாளர். அந்த வகையில் பாலாஜியே அதிக காய்ன்களை எடுத்தார். ஒருவருக்கு ஓடிப்பிடித்து விளையாட வேண்டிய இந்த கேமை சுவாரசியமே இல்லாமல் செய்தார் பாலாஜி.
ஆரியின் காயினை பிடுங்கினார்
அதாவது ஷிவானிக்கு பாயிண்ட்ஸ் வரவேண்டும் என்று கடைசியில் அவரிடமிருந்த காயினை பிடுங்கினார் பாலாஜி. ஆனால் முன்கூட்டியே மற்றவர்களின் காயினை பிடுங்கினார். அந்த வகையில் ஆரியின் காயுனையும் பிடுங்க வந்தார் பாலாஜி.
நீச்சல் குளத்தை சுற்றி
அப்போது ஓடி பிடித்து விளையாடலாம் வா, ஒருவருக்கொருவர் விளையாடலாம்.. கொடுக்கிறேன் எடுத்துக்கோ என்றார் ஆரி. இதற்காக நீச்சல் குளத்தை சுற்றி சுற்றி ஓடி விளையாடினார் ஆரி.
தடைகளை ஏற்படுத்தி
இதனால் கடுப்பான பாலாஜி ஆரியை ஓட விடாமல் இருக்க ஃபர்னிட்ச்சர்களை எடுத்துப்போட்டு அவரை ஓட விடாமல் தடைகளை ஏற்படுத்தினார். இதனால் கோபமான ஆரி, இந்தா எடுத்துக்கோ என்று தனது முதுகை திருப்பி காட்டினார்.
அப்படின்னா ஓடாதீங்க
பாலாஜி காயினை எடுத்துக்கொண்டதும், இந்த மாதிரியெல்லாம் விளையாடுறீயே தடுக்கி விழுந்தா என்னவாகும் என்று கேட்டார் ஆரி. அதற்கு அப்படின்னா ஓடாதீங்க என்று ஆரிக்கு அட்வைஸ் கொடுத்தார் பாலாஜி.
ஆம்பளையான்னு கேட்கல
அதற்கு ஏன்டா நீ ஆம்பளை பையன்தானே ஓடி பிடிச்சு விளையாடு என்று ஆரி கூற, வார்த்தையை விடாதீங்க என்றும் ஆம்பளையா என்று ஏன் கேட்கிறீர்கள் என்றும் எகிறினார் பாலாஜி. அதற்கு பதில் சொன்ன ஆரி, நீ ஆம்பளையா என்று கேட்கவில்லை. ஆம்பளை பையன்தானே ஓடி பிடிச்சு விளையாடு என்றுதான் சொன்னேன் என்றார்.
இப்படி விளையாட தெரியாது
அதற்கும் பதில் சொன்ன பாலாஜி, இது ஒன்னும் ஓடி பிடிச்சு விளையாடுற கேம் இல்லை, உங்களுக்கு விளையாட தெரியவில்லை என்றும் கூறினார். அதற்கு பதில் சொன்ன ஆரி, இந்த மாதிரி கேம்மெல்லாம் எனக்கு விளையாட தெரியாது என்றார்.
ஆரியின் வாயை பிடுங்குகிறார்
மேலும் இந்த மாதிரி கேம் விளையாடுறதுக்கு நான் சும்மா உட்காந்திருக்கலாம் என்றும் விரக்தியானார் ஆரி. ஆனால் இதையெல்லாம் சட்டை செய்யாத பாலாஜி, நான் நல்லாதான் விளையாடுகிறேன் என்று நினைக்கிறேன் என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜிக்கு எல்லாவற்றிலும் குறுக்கு புத்திதான். வேண்டும் என்றே ஆரியின் வாயை பிடுங்குகிறார் என விளாசி வருகின்றனர்.