கேப்டன் அனுபவம் எப்படி இருந்தது? ஆரிக்கு சல்யூட் அடித்த பாலாஜி.. என்னதான் ஆச்சு?
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தது எப்படி என்பது குறித்து பாலாஜியிடம் விசாரித்தார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.
ஆனால் அவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதானல் வெளியேறும் முன்பு இதுவரை பிக்பாஸ் வீட்டின் கேப்டன் பதவியை ருசிக்காத பாலாஜியை கேப்டனாக்கினார் அர்ச்சனா.

ஓசி கேப்டன் பாலாஜி
போட்டியில் தோல்வியுற்று கடைசி இடத்தை பிடித்த போதும் அதிர்ஷ்டவசமாக பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார் பாலா. இதனால் அவரை ஓசி கேப்டன் என்று கூறி வந்தனர் ரசிகர்கள்.

கேப்டனாயிடாதே..
இந்நிலையில் கேப்டன் ஆன பிறகு பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார் பாலாஜி. பலருடனும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சோமிடம் வீட்டின் கேப்டனாக மட்டும் ஆகிவிடாதே என்று வேண்டுகோள் விடுத்தார்.

குறைகளை அள்ளி தெளிச்சாங்க
இதனை கவனித்த கமல் இதுகுறித்து பாபலாஜியிடம் விசாரித்தார். அப்போது பேசிய பாலாஜி, இந்த வீட்டுக்கு வந்த 12 வாரத்துல 11 வாரம் அதிகமாக வேலை செய்யாமல் இருந்தேன். இந்த வாரம் வேலை அதிகமாக செஞ்சேன். ஆனால் குறைகளை அள்ளி தெளிச்சாங்க.
Recommended Video

ஆரிக்கு சல்யூட்..
என்னதான் க்ளோஸ் ஃபிரண்டா இருந்தாலும் கேப்டனா இருக்கும் போது குறைகளை சொல்லும் போது மனஸ்தாபம் ஏற்படுது. ஆனால் ஆரிக்கு நான் சல்யூட் பண்ணிக்கிறேன். ஏன்னா அவர் கேப்டனாக இருக்கும் போது, கிட்டத்தட்ட இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல கேப்டனா இருக்குற மாதிரி இருந்துச்சு என்று பாராட்டினார் பாலாஜி.


Click it and Unblock the Notifications











