என்னாலதான் எல்லாமே.. ஷிவானிக்காக கண்ணீர்விடும் பாலாஜி.. அப்படியே இருக்கே.. அடுத்த புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பிக்பாஸ் வீட்டில் இன்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது.
இதில் முதல் நபராய் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா, அவரை விளாசினார்.

வெளுத்த அம்மா
பாலாஜியுடன் ஷிவானி சுற்றி வருவதை வைத்து எதுக்கு வந்த? என்ன பண்ணிட்டு இருக்க என்று சரமாரியாக திட்டி தீர்த்தார். பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, நெருக்கமாக இருப்பது மசாஜ் செய்வது என இருந்து வந்த காரணத்தை மறந்த ஷிவானியை வெளுத்தார்.

தனியாக அழும் ஷிவானி
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி சோஃபாவில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறார். அப்போது கிட்சன் ஏரியாவில் அமர்ந்து ரம்யாவும் பாலாஜியும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

உங்களை சொல்லல
அப்போது பேசும் ரம்யா, நிறைய ரியாக்ஷன்ஸ் வெளியே வந்திருக்கும்னு நினைக்கிறேன். உங்களை எதுவும் சொல்லவில்லை. அவங்களைதான் சொல்லியிருக்காங்க. இன்டிவிட்ஜூவலா நீ ஏன் ஒரு ஒப்பினியனும் எடுத்து வைக்கல?

ரம்யா பேச பேச..
கம்ஃபர்ட் ஸோன்ல இருக்கணும்னா நீ வீட்டிலேயே இருந்திருக்கணும்னு சொல்லியிருக்காங்க என்று பாலாவிடம் கூறுகிறார். ரம்யா பேச பேச ஷிவானியை திரும்பி திரும்பி பார்க்கிறார் பாலாஜி.

நானும் சம்பந்தப்பட்டிருக்கேன்
பின்னர் ஆஜித்திடம் அதுகுறித்து பேசுகிறார். அதாவது, அவங்க அம்மாவே வந்து அப்படி பண்ணனும் இப்படி பண்ணனும்னு பேசும்போது அதுல நானும் சம்பந்தப் பட்டிருக்கேன்.

பாலாஜி கண்ணீர்
அது என்னாலதான் எனும் போது ரொம்ப கில்ட்டியா இருக்கு.. எதுவுமே அவரை கேட்காம பண்ணது ரொம்ப கில்ட்டியா இருக்கு என்று கண்ணீர் விடுகிறார் பாலாஜி. இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ.

அந்த சம்பவம் ஹிட்டானதால்
இதனை பார்த்த ரசிகர்கள் கடந்த சீசனில் கவின் செய்ததை அப்படியே செய்கிறார் பாலாஜி என்றும், ஆனால் கொஞ்சம் கூட நம்பும்படியில்லை என்றும் கூறி வருகின்றனர். மேலும் அந்த சம்பவம் ஹிட்டானதால் இதில் அப்படியே அதை தூக்கி வைத்துள்ளனர் என்றும் விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











