Don't Miss!
- News அவமானப்படுத்திய இன்ஸ்பெக்டர்.. கான்ஸ்டபிள் வேலையை தூக்கி எறிந்து விட்டு யுபிஎஸ்சியில் சாதித்த இளைஞர்
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை நடைபெற உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறதோ என புலம்பி தீர்த்துவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் பெடிக்யூர் மேனிக்யூர் மற்றும் ஹேர்கட் என அனைத்தையும் செய்து அழகுப்படுத்தினர்.
பாராட்டு நன்றி
தொடர்ந்து உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், ராணுவத்தினர் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேச கூறினார் பிக்பாஸ். அவர்கள் குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
புலம்பிய பாலாஜி
பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு தனியாக நின்று பேசினார் பாலாஜி. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ என்று நினைத்துதான் வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி மாதிரி. நம்மளை பத்தி நமக்கே காட்டும் ஒரு நிகழ்ச்சி.
என்ன நடக்கப் போகுதோ?
வெளியே என்ன நடக்குதுன்னு தெரியல.. நாளைக்கு ஃபினாலே இருக்கு யார் வின் பண்ண போறாங்கன்னு தெரியல. என்ன நடக்க போகுதுன்னு தெரியல. ஆனா ஹேப்பியா இருக்கு. இத்தனை கோடி பேருக்கு தெரிஞ்சுருக்கேன்.
யார் டைட்டில் வின்னர்?
ரொம்ப நாளா ஒரு கவலை இருந்துச்சு, என்ன பண்ணாலும் வெளியே தெரிய மாட்டேங்குறோம்னு நினைச்சேன். இப்போ ஹேப்பியா இருக்கு பெருமையா இருக்கு.. என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் டைட்டில் வின்னர் என்பது மட்டும்தான் பாலாஜியின் மனதில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.