Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை நடைபெற உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறதோ என புலம்பி தீர்த்துவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் பெடிக்யூர் மேனிக்யூர் மற்றும் ஹேர்கட் என அனைத்தையும் செய்து அழகுப்படுத்தினர்.
பாராட்டு நன்றி
தொடர்ந்து உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், ராணுவத்தினர் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேச கூறினார் பிக்பாஸ். அவர்கள் குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
புலம்பிய பாலாஜி
பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு தனியாக நின்று பேசினார் பாலாஜி. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ என்று நினைத்துதான் வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி மாதிரி. நம்மளை பத்தி நமக்கே காட்டும் ஒரு நிகழ்ச்சி.
என்ன நடக்கப் போகுதோ?
வெளியே என்ன நடக்குதுன்னு தெரியல.. நாளைக்கு ஃபினாலே இருக்கு யார் வின் பண்ண போறாங்கன்னு தெரியல. என்ன நடக்க போகுதுன்னு தெரியல. ஆனா ஹேப்பியா இருக்கு. இத்தனை கோடி பேருக்கு தெரிஞ்சுருக்கேன்.
யார் டைட்டில் வின்னர்?
ரொம்ப நாளா ஒரு கவலை இருந்துச்சு, என்ன பண்ணாலும் வெளியே தெரிய மாட்டேங்குறோம்னு நினைச்சேன். இப்போ ஹேப்பியா இருக்கு பெருமையா இருக்கு.. என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் டைட்டில் வின்னர் என்பது மட்டும்தான் பாலாஜியின் மனதில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.