Don't Miss!
- Lifestyle வெயிலால் முகம் கருப்பாகாம இருக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை தினமும் நைட் இப்படி யூஸ் பண்ணுங்க..
- Sports ஆர்சிபி அணிக்கு ஆப்பு.. உச்சம் சென்ற ஐதராபாத்.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 அணிகள்!
- News டிவிக்கு ‛செக்’ வைத்த தேர்தல் ஆணையம்.. தென்காசியில் இரட்டை இலையில் போட்டி! மனம் மாறிய கிருஷ்ணசாமி
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை நடைபெற உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறதோ என புலம்பி தீர்த்துவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் பெடிக்யூர் மேனிக்யூர் மற்றும் ஹேர்கட் என அனைத்தையும் செய்து அழகுப்படுத்தினர்.
பாராட்டு நன்றி
தொடர்ந்து உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், ராணுவத்தினர் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேச கூறினார் பிக்பாஸ். அவர்கள் குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
புலம்பிய பாலாஜி
பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு தனியாக நின்று பேசினார் பாலாஜி. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ என்று நினைத்துதான் வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி மாதிரி. நம்மளை பத்தி நமக்கே காட்டும் ஒரு நிகழ்ச்சி.
என்ன நடக்கப் போகுதோ?
வெளியே என்ன நடக்குதுன்னு தெரியல.. நாளைக்கு ஃபினாலே இருக்கு யார் வின் பண்ண போறாங்கன்னு தெரியல. என்ன நடக்க போகுதுன்னு தெரியல. ஆனா ஹேப்பியா இருக்கு. இத்தனை கோடி பேருக்கு தெரிஞ்சுருக்கேன்.
யார் டைட்டில் வின்னர்?
ரொம்ப நாளா ஒரு கவலை இருந்துச்சு, என்ன பண்ணாலும் வெளியே தெரிய மாட்டேங்குறோம்னு நினைச்சேன். இப்போ ஹேப்பியா இருக்கு பெருமையா இருக்கு.. என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் டைட்டில் வின்னர் என்பது மட்டும்தான் பாலாஜியின் மனதில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.