Don't Miss!
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- News ரேஷனில் குஷி.. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி..இலவச ரேஷன் திட்டத்தில் புது அதிரடி.. இதுதான் மோடி
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை நடைபெற உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறதோ என புலம்பி தீர்த்துவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் பெடிக்யூர் மேனிக்யூர் மற்றும் ஹேர்கட் என அனைத்தையும் செய்து அழகுப்படுத்தினர்.
பாராட்டு நன்றி
தொடர்ந்து உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், ராணுவத்தினர் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேச கூறினார் பிக்பாஸ். அவர்கள் குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
புலம்பிய பாலாஜி
பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு தனியாக நின்று பேசினார் பாலாஜி. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ என்று நினைத்துதான் வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி மாதிரி. நம்மளை பத்தி நமக்கே காட்டும் ஒரு நிகழ்ச்சி.
என்ன நடக்கப் போகுதோ?
வெளியே என்ன நடக்குதுன்னு தெரியல.. நாளைக்கு ஃபினாலே இருக்கு யார் வின் பண்ண போறாங்கன்னு தெரியல. என்ன நடக்க போகுதுன்னு தெரியல. ஆனா ஹேப்பியா இருக்கு. இத்தனை கோடி பேருக்கு தெரிஞ்சுருக்கேன்.
யார் டைட்டில் வின்னர்?
ரொம்ப நாளா ஒரு கவலை இருந்துச்சு, என்ன பண்ணாலும் வெளியே தெரிய மாட்டேங்குறோம்னு நினைச்சேன். இப்போ ஹேப்பியா இருக்கு பெருமையா இருக்கு.. என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் டைட்டில் வின்னர் என்பது மட்டும்தான் பாலாஜியின் மனதில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.