Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே நாளை நடைபெற உள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறதோ என புலம்பி தீர்த்துவிட்டார் பாலாஜி.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸ் ஃபைனலிஸ்ட்டாக ஆரி, பாலாஜி, ரியோ, சோம் மற்றும் ரம்யா ஆகிய 5 பேர் உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய எபிசோடில் வெள்ளிக் கிழமை நடந்த சம்பவங்கள் காட்டப்பட்டன. இதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவருக்கும் பெடிக்யூர் மேனிக்யூர் மற்றும் ஹேர்கட் என அனைத்தையும் செய்து அழகுப்படுத்தினர்.
பாராட்டு நன்றி
தொடர்ந்து உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகள், ராணுவத்தினர் மற்றும் திருவள்ளுவர் குறித்து பேச கூறினார் பிக்பாஸ். அவர்கள் குறித்து பேசிய ஹவுஸ்மேட்ஸ், அவர்களுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
புலம்பிய பாலாஜி
பின்னர் கார்டன் ஏரியாவில் இருந்த கேமரா முன்பு தனியாக நின்று பேசினார் பாலாஜி. பிக்பாஸ் ஒரு கேம் ஷோ என்று நினைத்துதான் வந்தேன். இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி மாதிரி. நம்மளை பத்தி நமக்கே காட்டும் ஒரு நிகழ்ச்சி.
என்ன நடக்கப் போகுதோ?
வெளியே என்ன நடக்குதுன்னு தெரியல.. நாளைக்கு ஃபினாலே இருக்கு யார் வின் பண்ண போறாங்கன்னு தெரியல. என்ன நடக்க போகுதுன்னு தெரியல. ஆனா ஹேப்பியா இருக்கு. இத்தனை கோடி பேருக்கு தெரிஞ்சுருக்கேன்.
யார் டைட்டில் வின்னர்?
ரொம்ப நாளா ஒரு கவலை இருந்துச்சு, என்ன பண்ணாலும் வெளியே தெரிய மாட்டேங்குறோம்னு நினைச்சேன். இப்போ ஹேப்பியா இருக்கு பெருமையா இருக்கு.. என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் டைட்டில் வின்னர் என்பது மட்டும்தான் பாலாஜியின் மனதில் இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.