Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஹவுஸ்மேட்ஸை ஆட்டுக்கல்லில் மாவாட்ட விட்ட பிக்பாஸ்.. அதிலேயும் ஆரியுடன் மல்லுக்கு நின்ற பாலாஜி!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்டுகளை மாவாட்ட விட்டு வடை சுட வைத்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் ஸ்பான்சர் நிகழ்ச்சியாக ஏதாவது ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. லெவிஸ்டா காஃபி, ஹேர் ஆயில், உதயம் நெய், டாபர் பேஸ்ட் என இதுவரை பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிகுறியே இல்லையாமே.. பிரபல ஹீரோவுக்கு கொரோனா பாதிப்பு.. வீட்டில் தனிமை!
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் உதயம் உளுத்தம் பருப்பு மற்றும் இட்லி அரிசிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.
தோசை மற்றும் வடை
அதாவது பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் இரு அணிகளாக பிரிந்து தோசை மற்றும் வடை செய்ய வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அதிகமாக தோசை மற்றும் வடை சுடும் டீமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
2 ஸ்லோகன்..
மேலும் டாஸ்க்கின் போது ஒவ்வொரு டீம் உதயம் பருப்பை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 2 வரிகளில் ஸ்லோகன் சொல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதில் பாலா ரம்யா ரியோ சோம் ஆகியோர் ஒரு அணியாகவும், ஆரி, ஷிவானி, கேபி, ஆஜித் ஆகியோர் ஒரு டீம்மாகவும் இருந்தனர்.
மாவரைத்த ஹவுஸ்மேட்ஸ்
இதில் ஹவுஸ்மேட்ஸ் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து வடை செய்ய வேண்டும். அதன்படி, கார்டன் ஏரியாவில் வைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கல்லில் ஷிவானியும் கேபியும் ஒரு அணியாக உளுத்தம் மாவை அரைத்தனர்.
ஆரியுடன் மல்லுக்கட்டு
இதேபோல் சோம் மற்றும் ரம்யா ஆகியோர் ஒரு அணியாக மாவு அரைத்தனர். இதில் பாலா ரம்யா ரியோ சோம் அணியே அதிக வடைகளையும் தோசையையும் சுட்டு வெற்றி பெற்றனர். அந்த இடத்திலும் ஆரி சொன்னதை கேட்காமல் தோசைக்கல்லில் மற்றொரு தோசைக்கல்லை வைத்து மூடி மூடி தோசை சுட்டு அவரிடம் மல்லுக்கட்டினார் பாலாஜி.