Don't Miss!
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காரணத்தை சொல்லி கொளுத்தி போட்ட பிக்பாஸ்.. வார்னிங் கொடுத்த பாலா.. கதவை உதைத்த ரியோ!
சென்னை: ஹவுஸ்மெட்ஸ் நாமினேஷனின் போது கூறிய காரணத்தை சொல்லி பிக்பாஸ் பற்ற வைத்ததால் பிக்பாஸ் வீடே அல்லோகளப்பட்டு விட்டது.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் நேற்று திங்கள் கிழமை என்பதால் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு ஹவுஸ்மெட்ஸ் ஒவ்வொருத்தரும் தலா இரண்டு போட்டியாளர்களின் பெயரை குறிப்பிட்டு நாமினேஷன் செய்தனர்.
சந்தேகப்பட்டுட்டல்ல.. சோமிடம் வேலையை காட்டிய அனிதா.. மொத்த பேரும் கடுப்புலதான் இருக்காங்க போல!
எவிக்ஷனன் புராசஸ்
நாமினேஷனுக்கான காரணத்தையும் கூறினர் ஹவுஸ்மெட்ஸ். நாமினேஷன் புராசஸ் நடந்து முடிந்ததும், யார் யார் எவிக்ஷன் புராசஸுக்கு தேர்வு ஆகியுள்ளார்கள் என்பதை கூறினார் பிக்பாஸ்.
காதல் கண்ண மறைக்குது
அப்போது ஹவுஸ்மெட்ஸ் கூறிய காரணங்களையும் பட்டியலிட்டார் பிக்பாஸ். அதாவது, மாத்தி மாத்தி பேசுறாங்க, ஓவர் ரியாக்ட் பண்றாங்க, காதல் கண்ண மறைக்குது, சிடுமூஞ்சி மேக்ஸ், 4 பேரோட கன்ஃபர்ட் ஸோன், பர்ஃபாமன்ஸ் கம்மி, நான் சிங்குல போகுது என ஹவுஸ்மெட்ஸ் கூறிய காரணங்களை கூறினார்.
ஏதாவது கேட்பேன்..
அதனை மற்ற ஹவுஸ்மேட்ஸ் ரசித்து கைகளை தட்ட, எப்பா.. கேட்டுக்குங்கப்பா.. இங்க காதல்லாம் எவனும் பணணல.. அப்படி எதாவது நினைப்பு இருந்து.. என் காதுல கேட்டுச்சுன்னா, நான் ஏதாவது கேட்பேன்.. என எச்சரித்தார்.
ரெண்டு பேரா பேசலையா?
மேலும் இங்க நான் லவ் பண்ண வரல, ரெண்டு பேரு சேர்ந்து உட்காந்து பேசினாலே லவ்வா? யாருமே ரெண்டு பேரா சேர்ந்து இங்க பேசலையா? நான் இங்க விளையாட வந்திருக்கேன் என்று கூறினார்.
திருட்டுப்பசங்க
தொடர்ந்து பெட்ரூமுக்குள் சென்ற பாலா, திருட்டுப் பசங்க.. என்றார். அப்போது ஷிவானியிடம் பேசிய பாலாஜி, லவ் வந்துச்சுன்னா உன்கிட்ட சொல்றேன் ஓகேவா.. வராது.. வந்துச்சுன்னா சொல்றேன் என்று கூறிவிட்டு வெளியில் சென்றார்.
காரித்துப்பிப்பாங்க..
பின்னர் மீண்டும் ஷிவானியிடம் பேசிய பாலாஜி, நான் உன்கிட்ட ஃபிரண்ட்லியாதான் பேசுறேன். நாம பேசுறத ஒரு மணி நேரம் உட்காந்து கேட்டாங்கன்னா ஓடிப்போயிடுவாங்க. இல்லாட்டி அவங்களே காரித்துப்பிப்பாங்க.. என்றார்
கதவை உதைத்தார்
ஏற்கனவே பாலா, காதை கிழிச்சுறுவேன் என்று கூறினார் என தவறாக புரிந்து கொண்டிருந்த ரியோ, அதையே எல்லோரிடமும் சொல்லி புலம்பினார். இந்நிலையில் பாலாஜியும் ஷிவானியும் பேசிக்கொண்டு வந்ததை பார்த்த ரியோ கதவை உதைத்தார்.
தப்பாயிடும்..
அப்போது கேட்ட சத்தத்தால் பாலாஜிதான் எதையோ உடைத்து விட்டார் என மொத்த ஹவுஸ்மெட்ஸும் பதறினர். ஆனால் ரியோதான் உதைத்தார் என்பதை அறிந்து அமைதியாயினர். அப்போது பேசிய பாலா, எனக்கும் கோபம் வருது நானும் உடைக்கவா, தப்பாயிடும் என்றார். பின்னர் ஒரு வழியாக இருவரும் பேசி சமாதானமாகினர்.