Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அக்கினேனி எனக்கு சித்தப்பா மாதிரி... நாக சைதன்யாவின் கண்டனத்தால் யூடர்ன் அடித்த பாலய்யா
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ம் தேதி வெளியானது.
பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதி ஹாசன், ஹனி ரோஸ் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இந்தப் படத்தின் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்கள் குறித்து மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்பட்டது.
இது மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், தற்போது நடிகர் பாலகிருஷ்ணா அதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
62 வயதில் இது தேவையா? இளம் நடிகையுடன் நெருக்கமாக மது அருந்திய பாலகிருஷ்ணா..மனுஷன் வாழ்றான்யா!
உளறிக்கொட்டிய பாலகிருஷ்ணா
ஒரே அடியில் ஆயிரம் பேரை வீழ்த்துவது, ஒற்றை கையால் ஓடும் ரயிலை தடுத்து நிறுத்துவது, பஞ்ச் டயலாக் பேசியே கேங்ஸ்டர்களை மிரள வைப்பது என தெலுங்கு சினிமாவின் கமர்சியல் ஃபார்முலாக்களுக்கு டஃப் கொடுத்தவர் பாலய்யா. அதே உருட்டல் மிரட்டலுடன் அவரது நடிப்பில் தற்போது வெளியான வீர சிம்ஹா ரெட்டி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாலகிருஷ்ணா ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹனி ரோஸ் நடித்திருந்தனர். கோபிசந்த் மலினேனி இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனைத் தொடர்ந்து நடந்த வீர சிம்ஹா ரெட்டி பட சக்சஸ் மீட்டிங்கில் பாலகிருஷ்ணா உளறிக்கொட்டியது சர்ச்சையானது.
நாகர்ஜுன் குடும்பத்தினர் பதிலடி
தன் தந்தை என்.டி.ராமராவின் காலத்தைச் சேர்ந்த சக நடிகர்கள் குறித்து பேசியிருந்தார். அப்போது பழம்பெரும் முன்னணி நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், ரங்கா ராவ் ஆகியோரை மரியாதை குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. அதாவது 'அக்கினேனி தொக்கினேனி' என ரைமிங்காக பேசி சிக்கலில் மாட்டினார் பாலய்யா. இந்த வீடியோ வைரலான நிலையில், அக்கினேனி நாகேஸ்வர ராவ் குடும்பத்தைச் சேர்ந்த நடிகர் நாகர்ஜுனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் இருவரும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
பாலய்யாவின் அடடே விளக்கம்
"நந்தமூரி தாரக ராமா ராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கா ராவ் இவர்கள் தங்களது படைப்பாற்றலால் தெலுங்கு சினிமாவின் பெருமையாகவும் தூண்களாகவும் திகழ்ந்தனர். அவர்களை அவமானப்படுத்துவது நம்மை நாமே தாழ்த்திக்கொள்வதற்கு சமம்" என அறிக்கை விட்டு பாலகிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். பாலய்யாவின் தந்தை என்.டி.ஆர், அக்கினேனி நாகேஸ்வர ராவ் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது இந்த சர்ச்சை குறித்து பாலகிருஷ்ணா விளக்கம் கொடுத்துள்ளார்.
அக்கினேனி எனக்கு சித்தப்பா மாதிரி
அதில், நான் அக்கினேனி சித்தப்பாவை தப்பாக பேசினேனா?, அவர் தன் சொந்த குழந்தைகளை விட என் மீது அதிக பாசத்துடன் இருப்பார். நான் சொல்ல வந்தது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார். எப்போதுமே எதையும் சீரியஸ்ஸாக பேசத் தெரியாத பாலய்யா, இந்த முறையும் அசட்டுத்தனமாக பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்ததோடு. திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் வேறு வழியே இல்லாத பாலய்யா, உடனடியாக யூடர்ன் அடித்து அக்கினேனி தனது சித்தப்பா மாதிரி என விளக்கம் கொடுத்து தப்பித்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.