Don't Miss!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சினிமா குடும்பத்தில் இருந்து.. வருகிறார் இன்னொரு வாரிசு ஹீரோ..லாக்டவுன் முடிந்ததும் ஷூட்டிங்!
சென்னை: பிரபல ஹீரோவின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ பாலகிருஷ்ணா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
நடிகரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகன் இவர். இப்போது போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் ..நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட நடிகை.. வைரலாகும் வீடியோ!
வாரிசு நடிகர்கள்
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகர்கள்தான் டாப் ஹீரோக்களாக இருக்கின்றனர். சினிமா தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்களின் வாரிசுகள், அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ராம்சரண் தேஜா, பிரபல ஹீரோ சிரஞ்சீவியின் மகன். அல்லு அர்ஜுன், பிரபாஸ், நிதின், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பெரும்பாலான ஹீரோக்கள் சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.
மோக்ஷக்னா
இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவும் தனது மகன் மோக்ஷக்னாவை (Mokshagna) ஹீரோவாக அறிமுகமாக்க முடிவு செய்துள்ளார். இதுதொடர்பான தகவல்கள் கடந்த சில வருடங்களாக வெளியாகி வந்தன. இந்நிலையில் அதை உறுதிப்படுத்தியுள்ளார் பாலகிருஷ்ணா. இதுபற்றி அவர் கூறும்போது, எனது மகன் மோக்ஷக்னாவின் சினிமா அறிமுகத்துக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நடிப்புத் திறமை
அவருக்கும் நடிப்பு ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அதற்காகத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார். நடிப்புத் திறமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளை செய்து வருகிறார். அவர் நடிக்கும் படத்துக்கான கதையை சாய் மாதவ் புர்ரா எழுதி வருகிறார். இந்த வருடம் படப்பிடிப்பு தொடங்கும்.
நன்றாக அறிந்தவர்
அவரையும் ஆதரித்து ரசிகர்கள் ஆசி வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நான் போயபதி ஶ்ரீனு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்றாக அறிந்தவர் அவர். இதில் சுவாரஸ்யமான கேரக்டரில் நடிக்கிறேன். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறது என்றார்.