3வது சுற்றில் பால் கேட்ச் டாஸ்க்.. விழுந்து வாரிய பாலா.. சோமின் தில்லாலங்கடி.. இன்றும் இருக்கு ரகளை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இரவு பகல் என தொடர்ந்து நடைபெறும் இந்த டாஸ்க்கில் நீல நிற பந்துகள் மதிப்பெண்களை கொடுப்பவைகளாகவும், சிவப்பு நிற பந்துகள் மதிப்பெண்களை ஜீரோவாக்குபவைகளாகவும் உள்ளது.

சிவப்பு பந்தை தொட்டு
இரவு முழுக்க விடிய விடிய இந்த டாஸ்க் நடைபெற்றது. இதில் சோம், ரியோ, ரம்யா கேபி ஆகியோர் உள்ள அணியே லிடிங்கில் உள்ளது. பாலாஜி சிவப்பு பந்தை தொட்டதால் அந்த அணி பெற்ற 50 மதிப்பெண்களையும் இழந்து பின் தங்கியிருக்கிறது.

மூன்றாவது சுற்றில் டாஸ்க்
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது. அதன்படி பால் கேட்ச் டாஸ்க் மூன்றாவது சுற்றை எட்டியுள்ளது. இதுவரை டீம்மாக நடைபெற்று வந்த இந்த டாஸ்க் தற்போது இன்டிவிட்ஜுவலாக கேம்மாக மாறியுள்ளது.

தனியாக பிடிக்க வேண்டும்
இதற்காக லிவிங் ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்மாவில் ஹவுஸ்மேட்ஸின் பெயர் ஒளிபரப்பப்படுகிறது. அவர்கள் சென்று தனியாக அவர்களுக்கு என போடப்படும் பந்தை பிடிக்க வேண்டும்.

அனிதா பாலையும் பிடித்து
இதிலும் சோம் அணியினர் கரெக்ட்டாக பந்துகளை பிடித்து விடுகின்றனர். பாலை பிடிக்க வேக வேகமாக ஓடி வந்து விழுந்து வாருகிறார் பாலாஜி. ரம்யா, சோம், அனிதா என பெயர்கள் ஒளிபரப்பப்பட அனிதாவின் பாலையும் சேர்த்து பிடித்துவிடுகிறார் சோம்.

இன்னைக்கும் ரகளை இருக்கு
இதனால் அனிதா வாய்ப்பே இல்லாமல் நிற்கிறார். தனக்கான பந்தை சோம் பிடித்ததால் அனிதாவுக்கு பால் எதுவும் கிடைக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ இன்னைக்கும் பிக்பாஸ் வீட்டில் ரகளை இருக்கு என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











