Don't Miss!
- News நாட்டின் செல்வம் முஸ்லீம்களுக்கு செல்லும்.. மோடி பேச்சுக்கு ராகுல் தாக்கு! பிடிஆர் ஒரே வரியில் சாடல்
- Sports ஒரே தவறால் டி20 உலக கோப்பையில் இடம் போச்சு.. தினேஷ் கார்த்திக் செய்த மெகா சொதப்பல்
- Automobiles 2.5 லட்சத்தில் எந்த பைக்கை வாங்குவது என தெரியாமல் முழிக்கிறீங்களா? ஹீரோவில் இருந்து ஜாவா வரையில்!!
- Lifestyle கண்களுக்குக் கீழே கருவளையம் உள்ளதா? அது உங்கள் அழகைக் கெடுக்கிறதா?
- Technology மே 1 முதல் அமல்.. ICICI BANK-ன் புது ரூல்ஸ்.. IMPS உட்பட பல சேவைகளின் Service Charge-ல் திடீர் மாற்றம்!
- Finance 2030-ல் 1 கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா? இப்பவே தங்கம் வாங்கணும்னா வாங்கிடுங்க!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கடைசி பாடலான பொன்னி நதி.. பம்பா பாக்யா உயிரிழந்ததை அறிந்து உடைந்து போன வந்தியத்தேவன் கார்த்தி!
சென்னை: பொன்னியின் செல்வன் படம் வெளியாவதற்கு முன்னரே பொன்னி நதி பார்க்கணுமே பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானது ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வெறும் 49 வயதில் மாரடைப்பு காரணமாக இவரும் மறைந்து விட்டார். தொடர்ந்து ஏகப்பட்ட பிரபலங்கள் 50 வயதுக்கு குறைவாக மாரடைப்பால் உயிரிழந்து வரும் சோகம் திரையுலகை விடாது துரத்தி வருகிறது.
பம்பா பாக்யாவின் திடீர் மரணம் நடிகர் கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்களை வெகுவாக பாதித்துள்ளது.
இலக்கு தமிழ்நாடு தான்.. இளையராஜாவுடன் ஏ.ஆர். ரஹ்மான்.. க்யூட்டான வீடியோவுக்கு குவிந்த ரியாக்ஷன்ஸ்!
49 வயதில் மரணம்
புல்லினங்கால், சிம்டாங்காரன் என ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வித்தியாசமான கணீர் குரலுடன் பாடல்களை பாடி ரசிகர்களின் மூளைக்குள்ளே தனது குரலை செலுத்திய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 49. அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
கடைசி பாடலான பொன்னி நதி
ஏ.ஆர். ரஹ்மானின் கண்டுபிடிப்புகளில் மிகவும் பிரபலமான பம்பா பாக்யாவின் திடீர் உயிரிழப்பு ஒட்டுமொத்த இசையுலக ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விரைவில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிளான பொன்னி நதி பாடலின் துவக்க வரிகளை பம்பா பாக்யா பாடியுள்ளார். தற்போது அந்த பாடலே அவரது கடைசி பாடலாக மாறிவிட்டது என ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வந்தியத்தேவன் கார்த்தி வருத்தம்
ரொம்ப வருத்தமா இருக்கு, இப்படி திடீரென பம்பா பாக்யா நம்மை விட்டுப் பிரிவார் என கொஞ்சமும் நினைக்கவில்லை. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரும் சக்தி அவர்களுக்கு கிடைக்க பிரார்த்திக்கிறேன் என நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஷாந்தனு இரங்கல்
பம்பா பாக்யா அண்ணனோட வாய்ஸ் ரொம்பவே எனக்கு பிடிக்கும். இவ்வளவு சீக்கிரத்தில் மறைவார் என நினைக்கவில்லை. ஆழ்ந்த இரங்கல் என நடிகர் சாந்தனுவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல பிரபலங்களும் ரசிகர்களும் பம்பா பாக்யா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.