Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பேசும் 'மெரினா புரட்சி' படத்திற்கு தடை!
மெரினா புரட்சி படத்திற்கு சென்சார் போர்டு தடைவிதித்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியை பற்றி பேசும் மெரினா புரட்சி படத்திற்கு சென்சார் போர்டு .... தடைவிதித்துள்ளது.
நாட்சியாள் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ், தயாரித்து இயக்கி இருக்கும் திரைப்படம் மெரினா புரட்சி. பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியை பேசும் வகையில் புலனாய்வு பார்வையில் இப்படம் உருவாகியிருக்கிறுது.
இப்படம் வெளியானதும், ஜல்லிக்கட்டுக்கு தடைக்கு காரணமாக இருந்த சில தமிழர்களின் முகமூடி கிழியும் என இயக்கும் எம். எஸ்.ராஜ் தெரிவித்திருந்தார். இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
[தனுஷின் ஏக்கத்தை தீர்த்து வைப்பாரா ரஜினி?]
இந்நிலையில் இப்படத்திற்கு சான்றிதழ் தர மத்திய தணிக்கை வாரியம் மறுத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறுது. மெரினா புரட்சி படத்திற்கு தடைவிதித்துள்ள தணிக்கை வாரியம், மும்பையில் உள்ள மறு சீராய்வு கமிட்டிக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
மறு சீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.