Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார்
நடிகர் விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய் நடிப்பில் தெறி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே வழக்கும் நடந்து வருகிறது.