Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை கமிஷனரிடம் புகார்
நடிகர் விஜய்யின் தெறி படத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் விடுதலை கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மக்கள் விடுதலை கழகம் அமைப்பினர் அளித்துள்ள மனுவில், தஞ்சையை சேர்ந்த குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகரனின் தாகபூமி கதையை திருடி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் ஆகியோர் கத்தி படம் எடுத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விஜய், முருகதாஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நடிகர் விஜய், முருகதாஸ் ஆகியோர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், படைப்பு சுரண்டலில் ஈடுபடும் இயக்குநர் முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விஜய் நடிப்பில் தெறி படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே வழக்கும் நடந்து வருகிறது.