காதலருடன் நெருக்கம்.. புகைப்படத்தை பகிர்ந்த ஆதித்ய வர்மா பட நடிகை... அப்போ துருவ் விக்ரம் வாழ்க்கை?
மும்பை : ஹிந்தியை தொடர்ந்து தமிழில் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பனிதா சந்து.
முதல் படத்திலேயே பலரும் வியக்கும் அளவிற்கு மிக நெருக்கமாக நடித்து அசர வைத்தவர்.
இது நாள்வரை பனிதா சந்து சிங்கிள் என நினைத்துக் கொண்டிருக்கையில் தற்போது காதலருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் மனதில் வேலை பாய்த்துள்ளார்.

ஆதித்ய வர்மா
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான ஆதித்ய வர்மா எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ஹீரோயினாக நடிகை பனிதா சந்து நடித்து தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே ஹிந்தியில் அக்டோபர் என்ற படத்தில் வருண் தவானுடன் இணைந்து நடித்திருப்பார்.

தத்ரூபமாக நடித்து
குறிப்பாக காதல் காட்சிகளில் மிக தத்ரூபமாக நடித்து அசத்திய பனிதா சந்துவுக்கு தமிழில் அடுத்த திரைப்படம் எதுவாக இருக்குமென தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க இவரோ பாலிவுட்டுக்கு பறந்து சென்று அங்கு படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் விக்கி கெளஷல் நடிக்கும் சர்தார் உதாம் சிங் படத்தில் நடித்து வருகிறார்.

நீங்க கமிட்டடா??
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான பனிதா சந்து இன்றுவரை சிங்கிள் என எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்க வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல காதலருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தற்பொழுது பகிர்ந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் நீங்க கமிட்டடா?? சொல்லவே இல்ல!இன்னும் சிங்கிள்னு நினைச்சுட்டு ஆசையாசையாய் இருந்தோம் என வருத்தப்பட்டு கொண்டுள்ளனர்.

திடீரென காதலரை
இதற்கிடையில் இன்னும் சிலர் எல்லாம் போச்சு அப்போ துருவ் வாழ்க்கை? இந்த போட்டோவ துருவ் பாத்தாருன்னா அப்புறம் அவருடைய கேப்ஷன் என்னவா இருக்கும் என பலரும் ஆதித்ய வர்மா படத்தின் காதல் காட்சிகளை பார்த்த பிறகு பனிதா சந்துவும்,துருவ் விக்ரமும் நிஜமாகவே காதலித்து வருவதாக நினைத்துக் கொண்டிருக்க இப்பொழுது திடீரென காதலரை அறிமுகப்படுத்தியுள்ள பனிதா சந்துவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











