Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சூர்யா, வடிவேல், ரவிக்குமார், முருகதாஸ் லாக்கர்கள் சீல் வைப்பு
சமீபத்தில் மேற்கண்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு திரைப்பட பைனான்சியர் வீடும் ரெய்டில் சிக்கியது.
90 அதிகாரிகள் 25 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இந்த சோதனையில் நடிகர்களின் வீடுகளில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நகைகள், கணக்கில் வராத பல லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் கிடைத்தன. இதுபற்றி வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர்களின் வங்கி லாக்கர்களை திறந்து பார்க்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நடிகர்களின் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
இந்த லாக்கர்களை அடுத்த வாரம் திறந்து சோதனை நடத்த இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
கணக்கில் வராத பணம் - நகை மீட்பு...
இந்த சோதனையின்போது ஒரு நடிகரின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 80 லட்சம் பணம் சிக்கியதாம்.
அதேபோல இன்னொரு நடிகரின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ கணக்கில் வராத நகை சிக்கியதாம்.
இந்த இருவரின் வங்கி லாக்கர்களைத்தான் முக்கியமாக சோதனை போடவுள்ளனராம். அதிலும், பணம், நகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் ரெய்டு நடத்தப்பட்ட நான்கு கலைஞர்களும் வருமான வரித் தாக்கலில் பல முறைகேடுகள் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.