Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூர்யா, வடிவேல், ரவிக்குமார், முருகதாஸ் லாக்கர்கள் சீல் வைப்பு
சமீபத்தில் மேற்கண்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதேபோல புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு திரைப்பட பைனான்சியர் வீடும் ரெய்டில் சிக்கியது.
90 அதிகாரிகள் 25 குழுக்களாக பிரிந்து இந்த சோதனையை நடத்தினார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மறுநாள் புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நீடித்தது.
இந்த சோதனையில் நடிகர்களின் வீடுகளில் இருந்து முக்கிய சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. நகைகள், கணக்கில் வராத பல லட்சம் ரொக்கப் பணம் ஆகியவையும் கிடைத்தன. இதுபற்றி வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நடிகர்களின் வங்கி லாக்கர்களை திறந்து பார்க்க வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நடிகர்களின் வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
இந்த லாக்கர்களை அடுத்த வாரம் திறந்து சோதனை நடத்த இருப்பதாக வருமான வரித்துறை உயர் அதிகாரி தெரிவித்தார்.
கணக்கில் வராத பணம் - நகை மீட்பு...
இந்த சோதனையின்போது ஒரு நடிகரின் வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ. 80 லட்சம் பணம் சிக்கியதாம்.
அதேபோல இன்னொரு நடிகரின் வீட்டிலிருந்து ஒன்றரை கிலோ கணக்கில் வராத நகை சிக்கியதாம்.
இந்த இருவரின் வங்கி லாக்கர்களைத்தான் முக்கியமாக சோதனை போடவுள்ளனராம். அதிலும், பணம், நகைகள் வைக்கப்பட்டிருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் ரெய்டு நடத்தப்பட்ட நான்கு கலைஞர்களும் வருமான வரித் தாக்கலில் பல முறைகேடுகள் செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.