Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரூ 62 கோடி கடன் பாக்கி... சொந்த ஸ்டியோவுக்குள் நுழைய நாகார்ஜுனாவுக்கு தடை!
ஹைதராபாத்: ரூ 62 கோடி கடன் பாக்கிக்காக நடிகர் நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னபூர்ணை ஸ்டுடியோவை பறிமுதல் செய்துள்ளன வங்கிகள்.
இதைத் தொடர்ந்து அந்த ஸ்டுடியோவுக்குள் நுழைய நாகார்ஜூனா உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகன் நாகார்ஜூனா. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்.
இவருக்கு சொந்தமான அன்னப்பூர்ணா ஸ்டூடியோ ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இது 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த ஸ்டூடியோ பங்குதாரர்களாக நாகார்ஜூனாவின் குடும்பத்தினர் வெங்கட் அக்கினேனி, சுப்ரியா, சுரேந்திரா, நாகா சுசீலா, வெங்கட் ரோத்தம் ஆகியோர் உள்ளனர்.
இந்த ஸ்டூடியோ மீது ரூ 32.3 கோடியை ஆந்திரா வங்கியிலும், 29.7 கோடியை இந்தியன் வங்கியிலும் கடனாகப் பெற்றிருந்தார் நாகார்ஜூனா.
வங்கிகளின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகும் இந்த கடனை அவர் திருப்பிச் செலுத்தவில்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் அன்னபூர்ணா ஸ்டூடியோ முழுவதையும் பறிமுதல் செய்ததாக அறிவித்தனர்.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் இந்த ஸ்டூடியோவுக்குள் நுழையவோ, வர்த்தக ரீதியில் செயல்படவோ, வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ தடை செய்யப்பட்டுள்ளதாக எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.