நடிகைக்கு ஐ லவ் யூ மெசேஜ்.. தயாரிப்பாளரை சிக்கலில் மாட்டிவிட்ட நயன்தாரா.. உண்மையை உடைத்த பயில்வான்!
சென்னை: நடிகைக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி தயாரிப்பாளரை நயன்தாரா சிக்கலில் மாட்டவிட்ட சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவிற்கு வந்து பல ஆண்டுகள் ஆனாலும், இன்னும் டாப் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

அண்மையில் இவர் அன்னாபூரணி திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நானும் ரௌடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது. இதையடுத்து, ஆறு ஆண்டுகளாக இருவரும் காதல் புறாவாக சுற்றி வந்த நிலையில், கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.
நயன்தாரா சில்மிஷம்: இந்நிலையில் நடிகை நயன்தாரா, செய்த சில்மிஷம் செய்த விஷயத்தை பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அதில், நயன்தாரா, விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன் வல்லவன் படத்தின் போது நடிகர் சிம்புவை காதலித்து வந்தார். அதன்பின் தான் அந்த வேலையை நயன்தாரா தான் செய்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை இதுநம்ம அளு படத்தின் தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் கூறியிருக்கிறார்.
ஐ லவ் யூ: அதாவது இது நம்ப ஆளு படத்தின் போது சிம்பு தயாரிப்பாளர் தேனப்பனின் மொபைல் கேட்டுள்ளார். அப்போது, யாருக்கும் தெரியாமல் தயாரிப்பாளரிடம் கோபிகாவுக்கு ஐ லவ் யூ என்ற மெசேஜ் அனுப்பி இருந்தார். அந்த மெசேஜைப் பார்த்த டென்ஷனான கோபிகா, தயாரிப்பாளருக்கு போன் செய்து என்ன சார் ஐ லவ் யூ மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
விழுந்துவிழுந்து சிரித்தார்: இதைக் கேட்டு பதறிப்போன தயாரிப்பாளர் சுதாரித்துக்கொண்டு, நான் அப்ப அனுப்பவில்லை அதன்பின் நயன்தாரா, நேற்று போனை வாங்கினார். அவர் தான் விளையாட்டாக அனுப்பி இருப்பார். தவறாக எதுவும் நினைத்துக்கொள்ள வேண்டாம் என்று தேனப்பான் கோபிகாவிடம் கூறியுள்ளார். இதுகுறித்து, தயாரிப்பாளர் நயன்தாராவிடம் கேட்க அவர் விழுந்துவிழுந்து சிரித்ததாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











