அமலாபாலை நள்ளிரவில் போனில் அழைத்த நடிகர்.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: நடிகை அமலாபால் முதல் கணவரை பிரிய காரணமே இதுதான் என்றும், அவருக்கு நள்ளிரவில் போனில் அழைத்த நடிகர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். நடிகை அமலா பால் தற்போது, தனது நெருங்கிய நண்பர், ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையில் மிகவும் காலத்தை கழித்து வருகிறார்.
கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் 2017ஆம் ஆண்டு அவரிடமும் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதன்பின் 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்து அமலாபால், ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாக இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில், நடிகை அமலாபால் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரளாவில் பிறந்த அமலா பால் ஒரு சில மலையாளப்படங்களில் நடித்தார். ஆரம்பத்தில், சந்திரிகா சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்திற்கு பிறகு அமலா பாலுக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தன. அதன்பிறகு வீரசேகரன் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சதீஷ் குமார், அந்த படத்தின் படப்பிடிப்பை காரைக்குடியில் 50 நாட்களில் நடத்தி முடித்தார். அப்போது, அந்த இயக்குநருடன் நெருக்கமாக இருந்தார்.
இந்த படத்தைத் தொடர்ந்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் மலையாள படத்தை விட மோசமாக இருந்தது. இந்த படத்திற்கு மாமனாரின் இன்ப வெறி என விமர்சனங்கள் வந்தன. ஏன் என்றால், இந்த படத்தில் அமல் பால் நடித்ததற்கே ரொம்ப தைரியம் வேண்டும். இதனால், சிந்துசமவெளி படம் வெளியான போது அவர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

முன்னணி நடிகை: ஆரம்பத்தில் ஒரு மோசமான படத்தில் நடித்திருந்தாலும், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை வளர்ந்துக்கொண்டு முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து, தன்னை வைத்து இயக்கிய இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரை திருமணம் செய்து கொள்ளும் போதே, தனுஷ் மற்றும் அமலா பாலுக்கும் நல்ல புரிதல் இருந்ததாகவும், தனுஷ், அமலா பாலுக்கு நள்ளிரவு 12 மணிக்கு கூட போன் செய்யக்கூடிய அளவிற்கு இருவருக்கும் பழக்கம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அந்த நடிகர் தான் காரணம்: அதுமட்டுமில்லாமல் அமலா பாலுக்கு சரக்கு அடிக்கும் பழக்கம் இருக்கிறது, அதுக்கூட இரவு தான் என்றாலும், வீட்டின் நடுஹாலில் அமர்ந்து கொண்டு சிகரெட் பிடித்துள்ளார். இதனால், ஏ.எல். அழகப்பன் குடும்பமானமே போய்விட்டது என்று சொல்லி, சத்தம் போட்டாலும், அது என் விருப்பம் இதில் யாரும் தலையிட உரிமை இல்லை என்று சொன்னதால், இயக்குநர் ஏ எல் விஜயை அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்திற்கு பின் அதிக அளவில் கவர்ச்சி காட்டி நடித்த அமலா பால், ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் நடித்தார். இந்த படத்தில் நடித்து அமலா பால் பெயரை கெடுத்துக் கொண்டது தான் மிஞ்சம், படம் எதிர்பார்த்த அளவுக்கு பெற்றி பெறவில்லை. இதையடுத்து அமலா பால் மார்க்கெட் இழந்த நடிகையாக மாறினார் என்று பயில்வான் ரங்கநாதன் நடிகை அமலா பால் குறித்து பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











