படுக்கையை பகிர்ந்தால் படவாய்ப்பு.. பகீரை கிளப்பிய அங்கிதா.. விளாசிய பயில்வான்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகை அங்கிதா லோகண்டே, தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு என தொல்லை கொடுத்ததாகவும், தினமும் வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். நடிகை அங்கிதாவின் இந்த பேட்டியைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் அவரை கடுமையாக விளாசி உள்ளார்.

மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டே,1984 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இவருக்கும் சுஷாந்த் சிங்கிற்கும் பவித்ர ரிஷ்தா என்ற தொடரில் நடித்தபோது காதல் மலர்ந்தது. இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொள்ள போவதாக அறிவித்தனர். பின் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

Bayilvan Ranganathan talks about ankita lokhande

அங்கிதா லோகண்டே: இதையடுத்து, சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவரை நினைத்து வருத்தத்துடன் அங்கிதா பதிவுகளையும் வெளியிட்டிருந்தார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் விக்கி ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 17வது சீசனில் பங்கேற்ற அங்கிதா லோகண்டே 3வது இடத்தைப் பிடித்தார்.

படுக்கைக்கு அழைத்தார்கள்: அங்கிதா லோகண்டே ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன், மும்பையில் வாய்ப்பு தேடி அலைந்த போது, ஆடிஷனுக்கு சென்ற போது, தயாரிப்பாளர் தன்னை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார் என்றும், தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட் ஆனேன் அப்போது இந்த தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைத்தார். அப்போது எனக்கு 19 வயது தான் ஆகியிருந்தது.

Bayilvan Ranganathan talks about ankita lokhande

கடுமையாக திட்டினேன்: என்னிடம் இவ்வளவு கேவலமாக கேட்பார்கள் என நினைக்கவில்லை. நான் ஒருமாதிரி நிலைகுலைந்து விட்டேன். கூடுதலாக பணம் கிடைக்கும், சிறந்த நடிகையாக வலம் வரலாம் என்றெல்லாம் சொன்னார்கள். உங்க தயாரிப்பாளருக்கு திறமையான நடிகையை விட, அட்ஜஸ்ட் செய்ய பெண் தான் வேண்டும் என்றால் என்னை விட்டு விடுமாறு சொல்லி கடுமையாக திட்டி விட்டு வந்ததாக அங்கிதா கூறி இருந்தார்.

விளாசிய பயில்வான்: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகண்டே, தன்னை தென்னிந்திய தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்ததாக கூறியுள்ளார். படுக்கைக்கு அழைத்தார்கள் என்று சொல்ல தைரியம் இருக்கும் அங்கிதாவிற்கு, அந்த தயாரிப்பாளர் யார் என்று சொல்லுவதில் என்ன தயக்கம் என்று புரியவில்லை. முதலில் அதை சொல்லுங்க என்று அந்த நடிகையை விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X